Thursday, March 5, 2009

984. அன்பே இது நிஜம்தானா





அன்பே இது நிஜம்தானா
என் வானில் புது விண்மீனா
யாரைக் கேட்டது இதயம்
உன்னை தொடர்ந்து போக
என்ன துணிச்சல் அதற்கு
என்னை மறந்து போக
இருந்தும் அவை இனிய வரிகளே

கலகலவென பொழியும் பொழியும் மேகம் எங்கு செல்லுதோ
ஒலியில்லாமல் மலரும் மலரை உளவு பார்க்க செல்லுதோ
(கலகலவென..)
விரல் தொடவில்லையே நகம் படவில்லையே
விரல் தொடவில்லையே நகம் படவில்லையே
உடல் தடையில்லையே
இது போல் ஒரு இணையில்லையே
(கலகலவென..)

விழியும் விழியும் கலந்து கலந்து பார்வை ஒன்று ஆனதே
உயிரும் உயிரும் கலந்த போது உலகம் நின்று போனதே
(விழியும்..)
(கலகலவென..)

அழைக்கும்போது உதிக்க முடிந்தால் அதற்குப் பெயரும் நிலவில்லையே
நினைக்கும்போது நிலவு உதிக்கும் நிலவு அழைக்கக் குரலில்லையே
(அழைக்கும்போது..)
யாரை கேட்டது இதயம்
யாரைக் கேட்டது இதயம்
விழி தொடுவது விரல் தொடவில்லையே
(கலகலவென..)

படம்: ரிதம்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: சாதனா சர்கம்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam