Monday, November 1, 2010

நான் வானவில்லையே பார்த்தேன்



நான் வானவில்லையே பார்த்தேன்
அது காணவில்லையே வேர்த்தேன்
நான் வானவில்லையே பார்த்தேன்
அது காணவில்லையே வேர்த்தேன்

ஒரு கோடி மின்னல் பார்வை ஜன்னலில்
வீச சொல்லியா கேட்டேன்
இனி நிலவை பார்க்கவே மாட்டேன்

கூந்தல் கண்டவுடன் மேகம் வந்ததென்ன மயிலும் நடனமிடுமோ
பூவில் ஆடிவரும் வண்டு இமையில் இரு கண்கள் ஆகிவிடுமோ
தேடி தின்று விட ஆசை கிள்ளுதடி தேனில் செய்த இதழோ
மூடி வைத்த முயல் மூச்சு முட்டுதடி மீட்க என்ன வழியோ

பகல் நேரம் நிலவை பார்த்தது நானடி கண்ணம்மா
முந்தானை வாசம் வந்தது ஆறுதல் சொல்லம்மா
விழி கண்டவள் கண்டிட கெஞ்சுது நெஞ்சுது
கொஞ்சம் நில்லம்மா
(நான் வானவில்லையே..)

சேலை சூடி ஒரு சோலை போல வழி பூக்கள் சிந்தி விழுமோ
பாவையான மனம் ஈரமானதடி பார்வை தந்த வரமோ
பாதம் பட்ட இடம் சூடு கண்டு உனை நானும் கண்டு விடுவேன்
காதலான மழை சாரல் தூவி விட மார்பில் ஒதுங்கி விடுவேன்

பொய் மானை தேடி சென்றது நாமனின் கண்ணம்மா
மெய் மானை தேட சொன்னது மாரனின் நெஞ்சம்மா
விழி கண்டவள் கண்டிட கெஞ்சுது நெஞ்சுது
கொஞ்சம் நில்லம்மா
(நான் வானவில்லையே..)

படம்: மூவேந்தர்
இசை: சிற்பி
பாடியவர்: ஹரிஹரன்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam