Saturday, November 6, 2010

ஆகாய தாமரை அருகில் வந்ததே



ஆகாய தாமரை அருகில் வந்ததே
நாடோடி பாடலில் உருகி நின்றதே
(ஆகாய..)
காவல் தனை தாண்டியே
காதல் துணை வேண்டியே
(ஆகாய..)

மெல்லிசை பாட்டு முழங்கிட கேட்டு
இதயமே இளகுதா இள மயிலே
நீ மந்திரன் போலே மணி தமிழாலே
இசைக்கிறாய் இழுக்கிறாய் இளவரசே
ஒரு மட மாது இணை பிரியாது
இருக்குமோ மறக்குமோ
ஒரு பொழுதென்னும் அருவியை மீனும்
பிரியுமோ விலகுமோ
என்று இந்த லீலை எல்லாம்
எல்லை தாண்டி போவது
கையில் ஏந்தும் போதெல்லாம்
கன்னி போகும் பூவிது
முத்தம் தலைவன் இதழ் பதித்திட
இதயம் தித்தித்திட
புதிய மது ரசம் வாழ்ந்திட
(ஆகாய..)

புன்னகை முல்லை புது விழி குவளை
அழகிய ஆதாரங்கள் அரவிந்த பூவோ
உந்தன் கன்னங்கள் ரோஜா கொடி இடை அள்ளி
நிரத்தினில் நீ ஒரு செவ்வந்திப்பூ
செண்பகம் ஒன்று பெண் முகம் கொண்டு
எனக்கென பிறந்ததோ
குன்றினில் தோன்றும் குறிஞியும் இங்கே
குமரியை விளைந்ததோ

மின்னும் வண்ண பூக்கள் எல்லாம்
மாலையாக ஆகலாம்
மன்னன் தந்த மாலை எந்தன்
நெஞ்சை தொட்டு ஆடலாம்
நெஞ்சை தழுவியது துலங்கிட
உறவு விளங்கிட
இனிய கவிதைகள் புனைந்ததடா
(ஆகாய..)

படம்: நாடோடி பாட்டுக்காரன்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: இளையராஜா, S ஜானகி

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam