Wednesday, November 3, 2010

அடடட மாமரக்கிளியே ...

அடடட மாமரக்கிளியே
உன்னையின்னும் நான் மறக்கலையே
ரெண்டு நாளா உன்னையெண்ணி
பச்ச தண்ணி குடிக்கலையே
அடடட மாமரக்கிளியே ஏஏ

உன்னை நினைச்சே மஞ்சள் அரைச்சேன்
மாசக்கணக்கா பூசிக் குளிச்சேன்
அட என்னாட்டம் ராசாத்தி எவ இருக்கா சொல்லு
(உன்னை நினைச்சே)
அடடட மாதுளங்கனியே
இதை இன்னும் நீ நினைக்கலையே
கிட்டவாயேன் கொத்திப்போயேன்- உன்ன
நான் தடுக்கலையே
மறுக்கலையே (அடடட)


உப்ப கலந்தா கஞ்சி இனிக்கும்
ஒன்னக் கலந்தா நெஞ்சு இனிக்கும்- அட
பரிசம் தான் போட்டாச்சு பாக்கு மாத்தியாச்சு
(உப்ப கலந்தா)
அடடட தாமரைக்கொடியே
இது ஓந்தோள் தொடவில்லையே
செல்லக்கண்ணு சின்னப்பொன்ணு
இதை நீ நினைக்கலையே
அணைக்கலையே(அடடட)

மீனைப்புடிக்க தூண்டி இருக்கு
நீரைப்பிடிக்க தோண்டி இருக்கு- அட
உன்னைத்தான் நான் பிடிக்க
கண்வலைய போட்டேன்
(மீனைப்புடிக்க)

அடடட மம்முதக்கனையே
வந்து வந்து மயக்குது எனையே
இந்த ஏக்கம் ஏது தூக்கம்
பாயைப்போட்டு படுக்கலையே
புடிக்கலையே
(அடடட)



திரைப்படம் : சிட்டுக்குருவி
குரல் : எஸ். ஜானகி
இசை: இளையராஜா

2 Comments:

வெங்கட் நாகராஜ் said...

இளையராஜாவின் இன்னிசையில் ஒரு அருமையான பாடலை பகிர்ந்ததற்கு நன்றி சகோ.

சென்ஷி said...

அருமையான பாடல்...

Last 25 songs posted in Thenkinnam