Saturday, November 13, 2010

காதல் ஓவியம் பாடும் காவியம்



காதல் ஓவியம் பாடும் காவியம்
தேன் சிந்தும் பூஞ்சோலை நம் ராஜ்ஜியம்
என்றும் ஆனந்தம் பேரின்பம் தெய்வீகம் ஓ
(காதல்..)

தேடினேன் ஓ என் ஜீவனே
தென்றலிலே மிதந்தது வரும் தேன் மலரே
நீ என் நாயகன் காதல் பாடகன்
அன்பில் ஓடி இன்பம் கோடி என்றும் காணலாம்
(காதல்..)

தாங்குமோ ஓ என் தேகமே
மன்மதனின் மலர் கணைகள் தோள்களிலே
மோகம் தீரவே வா என் அருகிலே
உள்ளம் கோவில் கண்கள் தீபம் பூஜை காணலாம்
(காதல்..)

படம்: அலைகள் ஓய்வதில்லை
இசை: இளையராஜா
பாடியவர்கள்: இளையராஜா, ஜென்ஸி
வரிகள்: வைரமுத்து

2 Comments:

Sivatharisan said...

அழகான வரிகள் இனிமையான இசை அழகாக காட்ச்சி அமைப்பு வாழ்த்துக்கள்

Rajasekaran ( இராஜசேகரன் ) said...

லவ்லி இளையராஜா

Last 25 songs posted in Thenkinnam