Thursday, November 11, 2010

ஊரெல்லாம் சாமியாக



ஊரெல்லாம் சாமியாக பார்க்கும் உன்னை
ஒரு தாரம் என்று நானும் எண்ணலாமோ

ஊரெல்லாம் சாமியாக பார்க்கும் உன்னை
ஒரு தாரம் என்று நானும் எண்ணலாமோ
வண்ணக்கிளியே சொல்லு கிளியே
வண்ணக்கிளியே சொல்லு கிளியே

ஊரெல்லாம் சாமியாக பார்க்கும் என்னை
ஒரு தாரம் என்று நானும் எண்ணலாமே
வண்ணக்கிளியே சொல்லு கிளியே
வண்ணக்கிளியே சொல்லு கிளியே

ஊரெல்லாம் சாமியாக பார்க்கும் உன்னை
ஒரு தாரம் என்று நானும் எண்ணலாமோ

தெய்வம் வரும் மனித உருவிலே படித்ததுண்டு ஏட்டிலே
தெய்வம் என்று தெரிந்த போதிலே பூட்டலாமோ வீட்டிலே
பூஜை செய்யும் தேவி உன்மேல் ஆசை வைத்தால் பாவம்
நானும் உன்னை தாரம் என்று ஏற்றுக்கொண்டால் துரோகம்
ஜீவன் உள்ள வான் நிலாவை நானும் சேரக் கூடுமோ
பாவம் இந்த பாவம் என்று காலம் என்னை தூற்றுமோ
(ஊரெல்லாம்..)

தெய்வம் கண நேரம் என் மேல் வந்து பேசி போகுது
வந்து பேசி போவதால் நான் தெய்வம் ஆக கூடுமோ
ஊரில் உள்ள பேருக்கெல்லாம் வாக்கு சொல்லும் பாவை
உன்னிடத்தில் கேட்டு நின்றாள் வார்த்தை ஒன்று தேவை
என்னை தெய்வம் என்றால் எந்தன் வாக்கும் தெய்வ வாக்குதான்
தெய்வ வாக்கை ஏற்றுக் கொண்டு வாழ்க்கை ஒன்றை நீ கொடு

படம்: தெய்வ வாக்கு
இசை: இளையராஜா
பாடியவர்கள்: ஜெயசந்திரன், S ஜானகி

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam