Thursday, August 4, 2011

ஒரு தேவதை வீசிடும் பார்வையிலே


ஒரு தேவதை வீசிடும் பார்வையிலே
விழுவது ஒரு சுகம்
அவள் தூரத்தில் வருவதை பார்க்கையிலே
கரைவதும் ஒரு சுகம்
என்னோடு புது மாற்றம் தந்தாள்
எங்கெங்கும் உரு மாற்றம் தந்தாள்
என் வாழ்வில் ஒரு ஏற்றம் தந்தாள்
அவள் எனக்கு என்று இந்த மண்ணில் வந்து பிறந்தவளோ
கண் தூங்கும் போதும் காவல் தந்தாள்
அவள் கடவுள் தந்த பரிசாகக் கையில் கிடைத்தாள்

ஓ ஓ ....

(ஒரு தேவதை வீசிடும்)

என் வானில் மேகங்கள்
சொல்லாமல் தூறுதே
என் காதல் வானிலை
சந்தோஷம் தூவுதே
நீ தந்தாய் பார்வை
 நனைந்தாளே பாவை
அன்பே அன்பே எந்தன் நெஞ்சில்
ஒளி வீசும் காலை
இருள் பூசும் மாலை
உந்தன் முகம் எந்தன் கண்ணில்
மின்சாரம் இல்லா நேரத்தில்
மின்னலாய் வந்து ஒளி தருவாள்
அந்த வெளிச்ச மழையில்
நான் நனைந்திடுவேன்
விரல் தொட்டு விடும் தூரத்தில்
மனம் சுட்டெரிக்கும் பாரத்தில்
புரியாத போதை
இது புரிந்த போதும்
அவள் பக்கம் வர பக்கம் வர
படபடக்கும்

ஓ ஓ ....

அவள் மாலையில் மலர்ந்திடும்
மலர் அல்லவா
வாசனை என் சொந்தம்
அவள் அனைவரும் ரசித்திடும்
நதி அல்லவா
அலை மட்டும் என் சொந்தம்

ஓ ஓ ......

கண்ணாடி அவள் பார்த்ததில்லை
ஏன் என்று நான் கேட்டதில்லை
அவள் அழகை அளக்க ஒரு கருவி அல்ல
அவள் கட்டளையை கேட்டுத் தான்
நான் கட்டுப்பட்டு வாழுவேன்
அறியாத பாதை இது அறிந்த போதும்
அவள் பக்கம் வர பக்கம் வர
படபடக்கும்

ஓ ஓ.....

(ஒரு தேவதைவீசிடும்)


திரைப்படம் : வெப்பம்
பாடியவர்கள் : க்ளிண்டன், ஸ்வேதா
இசை : ஜோஷுவா ஸ்ரீதர்

1 Comment:

குறையொன்றுமில்லை. said...

இப்பதான் உங்க பக்கம் வரேன்னு நினைக்கிரேன். நல்லபாடல் வரிகள் பகிர்வுக்கு நன்றி.

Last 25 songs posted in Thenkinnam