Wednesday, August 24, 2011

தேன் தூங்கும் பூவே



தேன் தூங்கும் பூவே
வாடாமல் வாழ்க
பால் வெண்ணிலாவே
தேயாமல் வாழ்க
இளமானே உன்னோடு
நிழல் போலே பின்னோடு
வருவேன் நானே
(தேன் தூங்கும் பூவே)

பாவேந்தர் பாடிய பாடல்
மகளே வார்த்தை தானோ
மூவேந்தர் மாளிகை தீபம்
மலரே உன் பார்வை தானோ (பாவேந்தர்)

நெஞ்சே பொன்னூஞ்சல் போலே
செல்வமே வந்து ஆடு
சேயும் தாயும் நாளெல்லாம்
சேர்ந்து வாழலாம் (தேன் தூங்கும் பூவே)

ஆகாயம் பூமி அனைத்தும்
நீயாகத் தோன்றுதம்மா
நான் காணும் கனவுகள் உன்னால்
நிறைவேறக்கூடுமம்மா
நீயே இங்கில்லையானால்
மண்ணில் நான் வாழ்வதேது
நேரம் காலம் மாறலாம்
நேசம் மாறுமோ
(தேன் தூங்கும் பூவே)

திரைப்படம் : கோடைமழை
பாடியவர் : ஜானகி
இசை: இளையராஜா

1 Comment:

வல்லிசிம்ஹன் said...

அன்பில் மலர்ந்த நல் ரோஜா

பாடியவர் பி.சுசீலா
படம் கணவமே கண் கண்ட தெய்வம்.
அழகிய தாலாட்டுப் பாடல். எல்லொருக்கும் பிடிக்கும்
என்று நினைக்கிறேன்.

Last 25 songs posted in Thenkinnam