Tuesday, August 23, 2011

வேங்கை - காலங்காத்தால



காலங்காத்தால மறஞ்சிருக்கும் வெண்ணிலா போல
என்னப் பாத்தாலே ஒளிஞ்சுக்குறியே பெண்ணே
ஹும்ம் ஹும்ம் ஹும்ம்
காலங்காத்தால மறஞ்சிருக்கும் வெண்ணிலா போல
என்னப் பாத்தாலே ஒளிஞ்சுக்குறியே பெண்ணே
பொழுது சாஞ்சாலே தல குனியும் தாமரப்போல
என்னப் பாத்தாலே வெக்கப்படுறியே பெண்ணே
உன்னை நான் பார்த்தேன் நான் ரசித்தேன் நான் திண்டாடினேன்
உன்னை நான் தொடர்ந்தேன் நான் உணர்ந்தேன் நான் காதல் கொண்டேன்
என் வாழ்கையின் வாசலே நீயேதானடி ஹொ ஹோ ஹோ

காலங்காத்தால மறஞ்சிருக்கும் வெண்ணிலா போல
என்னப் பாத்தாலே ஒளிஞ்சுக்குறியே பெண்ணே
பொழுது சாஞ்சாலே தல குனியும் தாமரப்போல
என்னப் பாத்தாலே வெக்கப்படுறியே பெண்ணே

உதட்டை சுழித்து சிரிக்கும்பொழுது உயிரில் வெடி வைக்கிறாய்
ஒவ்வொரு வார்த்தை முடியும்பொழுதும் எதற்கு பொடி வைக்கிறாய்
கொலு பொம்மை போல் இருக்கிறாய் நீ கொடி முல்லை போல் நடக்கிறாய்
அடிக்கடி நகம் கடிக்கிறாய் என்னை மயக்கி மாயம் செய்தாய்
நான் ராத்திரி பார்த்திடும் வானவில் நீ ஹோ ....ஓ

காலங்காத்தால மறஞ்சிருக்கும் வெண்ணிலா போல
என்னப் பாத்தாலே ஒளிஞ்சுக்குறியே பெண்ணே
பொழுது சாஞ்சாலே தல குனியும் தாமரபோல
என்னப் பாத்தாலே வெட்க்கப்படுறியே பெண்ணே

பழசை மறைக்க நெனைக்கும் உனக்கு நடிக்க வரவில்லையே
உருவம் மறந்து புருவம் விரிய சிறுவன் நானில்லையே
எதற்கு நீ என்னை தவிர்கிறாய் என் எதிரிலே முகம் சிவக்கிறாய்
அகமெல்லாம் பொய் பூசியே என்னை அருகில் சேர்க்க மறுத்தாய்
என் ஆவியை தாக்கிடும் தீயே நீயடி ...ஹோ...... ஓ...........

காலங்காத்தால மறஞ்சிருக்கும் வெண்ணிலா போல
என்னப் பாத்தாலே ஒளிஞ்சுக்குறியே பெண்ணே
பொழுது சாஞ்சாலே தல குனியும் தாமரபோல
என்னப் பாத்தாலே வெட்க்கப்படுறியே பெண்ணே

படம்: வேங்கை
இசை: தேவிஸ்ரீ பிரசாத்
பாடியவர்: கார்த்திக்
வரிகள்: விவேகா

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam