Tuesday, August 23, 2011

மாடு மேய்க்கும் கண்ணே

இன்று பிறந்தநாள் கொண்டாடும் சிறுவன் நரேனுக்கு ( நாகை சிவா - தர்ஷினி அவர்களின் மகன் ) பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

மாடு மேய்க்கும் கண்ணே- நீ
போக வேண்டாம் சொன்னேன்
காய்ச்சின பாலு தரேன்; கல்கண்டுச் சீனி தரேன்
கை நிறைய வெண்ணை தரேன்; வெய்யிலிலே போக வேண்டாம்

காய்ச்சின பாலும் வேண்டாம்; கல்கண்டுச் சீனி வேண்டாம்
உல்லாசமாய் மாடு மேய்த்து, ஒரு நொடியில் திரும்பிடுவேன்

போக வேணும் தாயே
தடை சொல்லாதே நீயே


யமுனா நதிக் கரையில் எப்பொழுதும் கள்வர் பயம்
கள்வர் வந்து உனை அடித்தால் கலங்கிடுவாய் கண்மணியே
மாடு மேய்க்கும் கண்ணே - நீ போகவேண்டாம் சொன்னேன்

கள்ளனுக்கோர் கள்ளன் உண்டோ? கண்டதுண்டோ சொல்லும் அம்மா?
கள்வர் வந்து எனை அடித்தால் கண்ட துண்டம் செய்திடுவேன்
(போக வேணும் தாயே - தடை சொல்லாதே நீயே)

கோவர்த்தன கிரியில் கோரமான மிருகங்கள் உண்டு
கரடி புலியைக் கண்டால் கலங்கிடுவாய் கண்மணியே
(மாடு மேய்க்கும் கண்ணே - நீ போகவேண்டாம் சொன்னேன்)

காட்டு மிருகமெல்லாம் என்னைக் கண்டால் ஓடி வரும்
கூட்டங் கூட்டமாக வந்தால் வேட்டை ஆடி ஜெயித்திடுவேன்
(போக வேணும் தாயே - தடை சொல்லாதே நீயே)


பாசமுள்ள நந்தகோபர் பாலன் எங்கே என்று கேட்டால்
என்ன பதில் சொல்வேனடா என்னுடைய கண்மணியே
மாடு மேய்க்கும் கண்ணே - நீ போகவேண்டாம் சொன்னேன்

பாலருடன் வீதியிலே பந்தாடுறான் என்று சொல்லேன்
தேடி என்னை வருகையிலே ஓடி வந்து நின்றிடுவேன்
போக வேணும் தாயே - தடை சொல்லாதே நீயே

1 Comment:

நாகை சிவா said...

பாடலுக்கு மிக்க நன்றி. மிகவும் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று :)

Last 25 songs posted in Thenkinnam