Sunday, August 21, 2011

யுவன் யுவதி - உன் கண்ணை பார்த்த பிறகு



உன் கண்ணை பார்த்த பிறகு என் உள்ளே லட்சம் சிறகு
உன் ஓர பார்வை அசைவில் மனம் குடை சாயும்
நீ வந்து போன பிறகு தலைகீழாய் மாறும் உலகு
உன் இல்லம் இருக்கும் திசையில் திரியுதென் பாதம்
தண்ணீரில் ஆடும் அலையாய் காற்றோடு மிதக்கும் இலையாய்
என் மனதும் மாறுகின்றதே உனதாய்
சில நேரம் மிகவும் சுகமாய் சில நேரம் மிகவும் சுமையாய்
ஹையோ காதல் படுத்துகின்றதே புதிதாய்
உன் கண்ணை பார்த்த பிறகு என் உள்ளே லட்சம் சிறகு
உன் ஓர பார்வை அசைவில் மனம் குடை சாயும்

அடி உன்னை போல பெண்ணை எங்கும் கண்டதில்லை
இன்று வரை என் மனதை யாருமே ஈர்த்ததில்லை.. ஓ ஹோ ஹோ
உன் உதடு எந்தன் பேரை சொல்லும் நேரம்
சிலிர்கிறேன் தவிக்கிறேன் என்வசம் நானும் இல்லை.. ஓ ஹோ ஹோ
மழை நின்ற போதும் கிளைகள் சிறு தூறல் போடுவது போல்
நீ கடந்த பிறகும் நினைவில் இருப்பாய்
உன் கண்ணை பார்த்த பிறகு என் உள்ளே லட்சம் சிறகு
உன் ஓர பார்வை அசைவில் மனம் குடை சாயும்

என்னை விட்டு உள்ளம் உந்தன் பின்னல் செல்லும்
தடுக்கிறேன் தவிர்கிறேன் இதயமும் கேட்கவில்லை ...ஓ ஹோ ஹோ
நான் இன்று போல என்றும் சொக்கிப்போனதில்லை
இதற்குமுன் எனக்கிந்த பரவசம் பாய்ந்ததில்லை .. ஓ ஹோ ஹோ
நீ நேற்று எங்கு இருந்தாய் என் நெஞ்சில் இன்று நுழைந்தாய்..
இனி நாளை என்ன அவஸ்தை புரிவாய்

உன் கண்ணை பார்த்த பிறகு என் உள்ளே லட்சம் சிறகு
உன் ஓர பார்வை அசைவில் மனம் குடை சாயும்
நீ வந்து போன பிறகு தலைகீழாய் மாறும் உலகு
உன் இல்லம் இருக்கும் திசையில் திரியுதென் பாதம்
தண்ணீரில் ஆடும் அலையாய் காற்றோடு மிதக்கும் இலையாய்
என் மனதும் மாறுகின்றதே உனதாய்
சில நேரம் மிகவும் சுகமாய் சில நேரம் மிகவும் சுமையாய்
ஹையோ காதல் படுத்துகின்றதே புதிதாய்
உன் கண்ணை பார்த்த பிறகு என் உள்ளே லட்சம் சிறகு
உன் ஓர பார்வை அசைவில் மனம் குடை சாயும்

படம்: யுவன் யுவதி
இசை: விஜய் அந்தோணி
பாடியவர்கள்: கார்த்திக், ரம்யா
வரிகள்: பிரியன்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam