Thursday, May 7, 2009

சிவா மனசுல சக்தி - ஒரு கல் ஒரு கண்ணாடி





ஒரு கல் ஒரு கண்ணாடி
உடையாமல் மோதிக்கொண்டால் காதல்
ஒரு சொல் சில மௌனங்கள்
பேசாமல் பேசிக்கொண்டால் காதல்
கண்கள் ரெண்டால் காதல் வந்தால் ஓஓ
கண்ணீர் மட்டும் துணையாகுமே
(ஒரு கல்..)

திமிருக்கு மறுப்பெயர் நீதானே
தினம் தினம் முன்னால் இருந்தேனே
மறந்திட மட்டும் மறந்தேனே
தீயென புரிந்தும் அடி நானே
திரும்பவும் உன்னைத்தொட வந்தேனே
தெறிந்தே சுகமாய் எறிந்தேனே
கடும் விசத்தினை எடுத்துக் குடித்தாலும்
அடிக்கொஞ்ச நேரம் கழித்தே உயிர்ப்போகும்
இந்தக் காதலிலே உடனே உயிர்ப்போகும்
காதல் எனால் பெண்ணே சித்திரவதை தானே
(ஒரு கல்..)

உன் முகம் பார்த்தே நான் எழுவேன்
உன் குரல் கேட்டால் நான் அறிவேன்
உன் நிழலுடனே நான் வருவேன்
புன்னகை செய்தால் உயிர் வாழ்வேன்
புறக்கணித்தால் நான் என்னாவேன்
பெண்ணே எங்கே நான் போவேன்
உன் உதட்டுக்குள் இருக்கும் ஒரு வார்த்தை
அதை சொல்லிவிட்டால் தொடங்கும் என் வாழ்க்கை
ஒரு மௌனத்தில் இருக்கும் என்ன வலிகள்
காதல் என்றால் மெல்ல சாதன் என்று சொல்லும்
(ஒரு கல்..)

படம்: சிவா மனசுல சக்தி
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்: அட்னான் சாமி

2 Comments:

ILA (a) இளா said...

தோரணை பாட்டெல்லாம் எப்போ போடுவீங்க?

Anonymous said...

தோரணை பாடல் போடறதுக்கு இருக்கட்டும். வரிசை எண்கள் எம்ம்பா விட்டூடீங்க..

Last 25 songs posted in Thenkinnam