Tuesday, May 26, 2009

ஒன்றா ரெண்டா ஆசைகள்



ஒன்றா ரெண்டா ஆசைகள்
எல்லாம் சொல்லவே ஓர் நாள் போதுமா
அன்பே இரவைக் கேட்கலாம்
விடியல் தாண்டியும் இரவே நீளுமா
என் கனவில் நான் கண்ட
நாள் இதுதான் கலாபக் காதலா
பார்வைகளால் பல கதைகள்
பேசிடலாம் கலாபக் காதலா
(ஒன்றா ரெண்டா..)

பெண்களை நிமிர்ந்து பார்த்திடா
உன் இனிய கண்ணியம் பிடிக்குதே
கண்களை நேராய்ப் பார்த்துதான்
நீ பேசும் தோரணை பிடிக்குதே
தூரத்தில் நீ வந்தாலே
என் மனசில் மழையடிக்கும்
ம்கப்பிடித்த பாடலொன்றை
உதடுகளும் முணுமுணுக்கும்
மழைவாசம் சிந்தும் உந்தன் முகம்
மரணம் வரையில் என் நெஞ்சில் நங்கும்
உன் கண்களில் எனது கனவினைக் காணப்போகிறேன்
(ஒன்றா ரெண்டா..)

சந்தியாக் கால மேகங்கள்
பொன் வானில் ஊர்வலம் போகுதே
பார்க்கையில் ஏனோ நெஞ்சிலே
உன் நடையின் சாயலே தோணுதே
நதிகளிலே நீராடும் சூரியனை நான் கண்டேன்
வேர்வைகளின் துளிவழியே நீ வருவாய் என நின்றேன்
உன்னால் என் நெஞ்சில் ஆணின் மனம்
நான் உன் சொந்தம் என்ற எண்ணம் தரும்
மகிழ்ச்சி மீறுதே வானைத் தாண்டுதே சாகத்தோன்றுதே
(ஒன்றா ரெண்டா..)

படம்: காக்க காக்க
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்: பாம்பே ஜெயஸ்ரீ
வரிகள்: தாமரை

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam