Sunday, May 10, 2009

பசங்க - அன்பாலே அழகாகும் வீடு




அன்பாலே அழகாகும் வீடு
ஆனந்தம் அதற்க்குள்ளே தேடு
சொந்தங்கள் கை சேரும்போது
வேறொன்றும் அதற்க்கில்லை ஈடு
(அன்பாலே..)

வாடகை வீடே என்று வாடினால் ஏது இன்பம்
பூமியே நமக்கானது ஓ..
சோகமே வாழ்க்கை என்று சோர்வதால் ஏது லாபம்
யாவுமே இயல்பானது
மாறாமல் வாழ்வுமில்லை தேடாமல் ஏதுமில்லை
நம்பிக்கை விதையாகுமே
கலைகின்ற மேகம் போலே காயங்கள் ஆறிப்போக
மலரட்டும் எதிர்காலமே
(அன்பாலே..)

பாசமே கோவில் என்று வீட்டிலே தீபம் வைத்தால்
கார்த்திகை தினந்தோறுமே
ஆ.. நேசமே மாலை என்று நெஞ்சிலே சூடிக்கொண்டால்
வாசனை துணையாகுமே ஆ...
கூடினால் கோடி நன்மை சேருமே கையில் வந்து
வாழ்ந்திடு பிரியாமலே
ஏணியே தேவையில்லை ஏறலாம் மேலே மேலே
தோல்விகள் வெறும் காணலே
(அன்பாலே..)

படம்: பசங்க
இசை: ஜேம்ஸ் வசந்த்
பாடியவர்கள்: பாலமுரளி கிருஷ்ணா, சிவாங்கி

1 Comment:

pudugaithendral said...

வெகு நாட்களுக்கு பிறகு பாலமுரளி அவர்கள் பாட்டு திரையில்.

பதிவுக்கு நன்றி

Last 25 songs posted in Thenkinnam