Wednesday, May 6, 2009

நதியோரம் நாணல் ஒன்று ...



நதியோரம் ..நதியோரம்
நாணல் ஒன்று
நாணம் கொண்டு
நாட்டியம் ஆடுது மெல்ல
நானந்த ஆனந்தம் என் சொல்ல-நதியோரம்

நதியோரம் நதியோரம்
நீயும் ஒரு நாணல் என்று
நூலிடை என்னிடம் சொல்ல
நானந்த ஆனந்தம் என் சொல்ல -நதியோரம்

வெண்ணிற மேகம்
வான் தொட்டிலை விட்டு-ஓடுவதென்ன?
மலையை மூடுவதென்ன?
முகில் தானோ துகில் தானோ(2)

சந்தனக் காடிருக்கு.. தேன் சிந்துற கூடிருக்கு
தேன் வேண்டுமா நான் வேண்டுமா
நீ எனைக் கைகளில் அள்ள..
நானந்த ஆனந்தம் என் சொல்ல


தேயிலைத் தோட்டம் - நீ
தேவதையாட்டம் துள்ளுவதென்ன
நெஞ்சை அள்ளுவதென்ன
பனி தூங்கும் பசும்புல்லே
மின்னுது உன்னாட்டம் - நல்ல
முத்திரைப் பொன்னாட்டம்
கார்காலத்தில் ஊர்கோலத்தில்
காதலன் காதலி செல்ல
நானந்த ஆனந்தம் என் சொல்ல

பாடியவர் : எஸ்.பி.பாலசுப்ரமணியம், சுசீலா
திரைப்படம்: அன்னை ஓர் ஆலயம்
இசையமைத்தவர்: இளையராஜா

1 Comment:

சென்ஷி said...

கலக்கல் பாட்டு :))

//நதியோரம் ..நதியோரம்
நாணல் ஒன்று
நாணம் கொண்டு
நாட்டியம் ஆடுது மெல்ல//

Last 25 songs posted in Thenkinnam