கனவு கண்ட காதல்
கதை கண்ணீராச்சே
கதை கண்ணீராச்சே (கனவு)
நிலா வீசும் வானில்
மழை சூழலாச்சே
மழை சூழலாச்சே
கனவு கண்ட காதல் கதை கண்ணீராச்சே
முன்பே எண்ணிப் பாராமல்
நெஞ்சம் ஈந்திட்டேனே
எந்தன் ஆசையே இன்று
என்னைக் கொல்லலாச்சே
உந்தன் காதலின் கனவெல்லாம் கண்ணீராச்சே - ஆச்சே
கனவு கண்ட காதல் கதை கண்ணீராச்சே
நிலா வீசும் வானில்
மழை சூழலாச்சே
மழை சூழலாச்சே
அகம் வாட்டும் காதல் தீ
யார்க்கும் சொல்லாதே
மறைத்தே நான் வாழ்கின்ற மார்கம் கெடாதே
ஜெகம் வாழ்கிறேன்
வாழ்க்கையே கண்ணீராச்சே- ஆச்சே
கனவு கண்ட காதல்
கதை கண்ணீராச்சே
நிலா வீசும் வானில்
மழை சூழலாச்சே
மழை சூழலாச்சே
கனவு கண்ட காதல்
கதை கண்ணீராச்சே
கதை கண்ணீராச்சே
திரைப்படம் : அக்பர்(1961)
வரிகள் : கம்பதாசன்
இசை : நவ்ஷத்
Monday, September 12, 2011
கனவு கண்ட காதல் கதை கண்ணீராச்சே
Subscribe to:
Post Comments (Atom)
2 Comments:
Super kavithai
Kalakkal
Post a Comment