Wednesday, September 28, 2011

ஆயிரம் வானவில் ஆயிரம் தோரணம் நானே நானா

ஆயிரம் வானவில் ஆயிரம் தோரணம் நானே நானா...
ஆயிரம் ஆடலும் ஆயிரம் பாடலும் நானே நானா...
புது வெயிலா புது மழையா நானே நானா....
புது மலரா புது நிறமா நானே நானா.....
இனி கவலை எப்போதும் இல்லை...
புது சிறகு ஆகாயம் இல்லை
தினம் தினமே சந்தோசம் தானே
புது விடியலில் என் தேசம் தானே
வானம்பாடி நான்..... புதுமை பெண்ணே நான்...
வானம்பாடி நான்..... புதுமை பெண்ணே நான்...
(ஆயிரம் )

நானே தேடும் முகம் நானே பாடும் சுகம்...
நானே காணும் நிலவு...
வானம் பூமி இனி எந்தன் தோழி என
நாளும் சேர்ந்து வருமே...
கால்தடம் கால்தடமாய்.....
ஆ....ஆ.....ஆ.....ஆ...........
நான் எனை நான் எனை தொடர்வேனே...
போதும் போதும் இனி எந்தன் வாழ்வு தனில்
சந்தோசங்கள் கோடி.......

(ஆயிரம்)

நானே எந்தன் குறை நானே தந்த வரம்
நானே சொந்த வெளிச்சம்...
இல்லை வேறு சிறை
சொல்வேன் நூறு முறை
நானே செய்யும் உலகம்
புன்னகை சிறகாலே....
ஆ......ஆ......ஆ......ஆ......
நான் இனி நான் இனி பறப்பேனே...
இன்னும் என்ன சொல்ல நாளை உண்டு வெல்ல
வாழும் வாழ்கை எனக்கே... (ஆயிரம்)
இசை : பரத்வாஜ்
பாடியவர்: சின்மயி
திரைப்படம்: வல்லமை தாராயோ
பாடல் வரிகள் : ஆண்டாள் பிரியதர்ஷிணி

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam