Thursday, September 29, 2011

மீனம்மா அதிகாலையிலும் அந்தி மாலையிலும்



மீனம்மா
அதிகாலையிலும் அந்தி மாலையிலும் உந்தன் ஞாபகமே
அம்மம்மா
முதல் பார்வையிலே சொன்ன வார்த்தையெல்லாம் ஒரு காவியமே

சின்னச் சின்ன ஊடல்களும் சின்னச் சின்ன மோதல்களும்
மின்னல் போல வந்து வந்து போகும்
மோதல் வந்து ஊடல் வந்து முட்டிக்கொண்ட போதும்
இங்கு காதல் மட்டும் காயம் இன்றி வாழும்
இது மாதங்கள் நாட்கள் செல்ல
நிறம் மாறிடும் பூக்கள் அல்ல

மீனம்மா
அதிகாலையிலும் அந்தி மாலையிலும் உந்தன் ஞாபகமே

ஒரு சின்னப் பூத்திரியில் ஒளி சிந்தும் ராத்திரியில்
இந்த மெத்தை மேல் இளம் தத்திக்கோர் புது வித்தை காட்டிடவா
ஒரு ஜன்னல் அங்கிருக்கு தென்றல் எட்டிப் பார்ப்பதற்கு
அதை மூடாமல் தாழ் போடாமல் எனைத் தொட்டு தீண்டுவதா
மாமன் காரன் தானே மால போட நானே
மோகம் தீரவே மெதுவாய் மெதுவாய் தொடலாம்

மீனம்மா
மழை உன்னை நனைத்தால் இங்கு எனக்கல்லவா குளிர் காய்ச்சல் வரும்
அம்மம்மா
வெயில் உன்னை அணைத்தால் இங்கு எனக்கல்லவா உடல் வேர்த்து விடும்

அன்று காதல் பண்ணியது உந்தன் கண்ணம் கிள்ளியது
அடி இப்போதும் நிறம் மாறாமல் இந்த நெஞ்சில் நிற்கிறது
அன்று பட்டுச் சேலைகளும் நகை நட்டும் பாத்திரமும்
உனை கேட்டேனே சண்டை போட்டேனே அது கண்ணில் நிற்கிறது
ஜாதி மல்லி பூவே தங்க வெண்ணிலாவே
ஆசை தீரவே பேசலாம் முதல் நாள் இரவு

மீனம்மா
உன்னை நேசிக்கவும் அன்பை வாசிக்கவும் தென்றல் காத்திருக்கு
அம்மம்மா
உன்னைக் காதலித்து புத்தி பேதலித்து புஷ்பம் பூத்திருக்கு

உன்னைத் தொட்ட தென்றல் வந்து என்னைத் தொட்டு
என்னென்னவோ சங்கதிகள் சொல்லிவிட்டு போக
உன் மனமும் என் மனமும் ஒன்றையொன்று ஏற்றுக்கொண்டு
ஒப்பந்தத்தில் கையெழுத்து போட
பின்பு மோகனப் பாட்டெடுத்தோம் முழு மூச்சுடன் காதலித்தோம்

மீனம்மா
அதிகாலையிலும் அந்தி மாலையிலும் உந்தன் ஞாபகமே

படம்: ஆசை
இசை: தேவா
பாடியவர்கள்: உன்னி கிருஷ்ணன், அனுராதா ஸ்ரீராம்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam