Sunday, May 16, 2010

அவள் யார் அவள் அழகானவள்



அவள் யார் அவள் அழகானவள்
அடி நெஞ்சிலே மின்னல்
ஒரு பார்வையால் ஒரு பார்வையால்
முதல் காதலும் துள்ளல்
எத்தனை எத்தனை நளினம்
அடி என்னுயிர் மீண்டும் சலனம்
இரு முறை இரு முறை ஜனனம்
அது உன்னை கண்ட ஒரு தருணம்
ரத்தம் மொத்தம் உறைகின்றதே
(அவள்..)

அன்பே நீ என் நெஞ்சில் போர் கப்பல் போல் வந்து
சொல்லாமல் கொல்லாமல் தாக்காதே தாக்காதே
ஆணோடு எப்போதும் இம்சைகள் செய்கின்ற
ஆதிக்க பெண்ணாக மாறாதே
அந்தி நிலா அந்தி நிலா
அல்லி மலர் அள்ளி அள்ளி எய்தவளா
என்னவளா என்னவளா
என்னை ஒரு அர்த்தமென செய்தவளா
செர்ஃபரி ஊரின விழிகள்
அதில் செந்தமிழ் மிஞ்சிடும் மொழிகள்
புன்னகை செய்யும் புயல் மேகமே
(அவள்..)

ஐந்தாறு கண்டங்கள் நீ தாண்டி சென்றாலும்
அங்கேயும் உனை வந்து பெண் பார்ப்பேன்
செவ்வாயில் நீ சென்று வாழ்ந்தாழும்
நான் உந்தன் செவ்வாயில் ஓரத்தில் தேன் வார்ப்பேன்
என்னுயிரே என்னுயிரே
மெய்யாக நான் இங்கு பொய்யானேன்
என்னுயிரே என்னுயிரே
பொய்யல்ல நான் இங்கு நீயானேன்
சட்டென சட்டென இதயம்
அல சில்லென சில்லென உடையும்
அத்தனை சில்லும் உன் பிம்பமே
(அவள்..)

படம்: அன்பு
இசை: வித்யாசாகர்
பாடியவர்: கார்த்திக்
வரிகள்: பா. விஜய்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam