Friday, May 28, 2010

யாரோ மனதிலே



வலியே என் உயிர் வலியே
நீ உலவுகிறாய் என் விழி வழியே
சகியே என் இளம் சகியே
உன் நினைவுகளால் நீ துரத்துறியே
மதியே என் முழு மதியே
பெண் பகல் இரவாய் நீ படுத்துறியே
நதியே என் இளம் நதியே
உன் அலைகளினால் நீ உரசுறியே

யாரோ மனதிலே ஏனோ கனவிலே
நீயா உயிரிலே தீயா தெரியலே
காற்று வந்து மூங்கில் என்னை பாடச் சொல்கின்றதோ
மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை ஊமை ஆகின்றதோ?
(வலியே..)

மனம் மனம் எங்கிலும் ஏதோ கனம் கனம் ஆனதே
தினம் தினம் ஞாபகம் வந்து ரணம் ரணம் தந்ததே
அலைகளின் ஓசையில் கிளிஞ்சலாய் வாழ்கிறேன்
நீயா முழுமையாய்
நானோ வெறுமயாய்
நாமோ இனி சேருமா
(யாரோ..)

மிக மிகக் கூர்மையாய் என்னை ரசித்ததுன் கண்கள்தான்
மிருதுவாய் பேசியே என்னுள் வசித்ததுன் வார்த்தை தான்
கண்களைக் காணவே இமைகளே மறுப்பதா
வெண்ணீர் வெண்ணிலா
கண்ணீர் கண்ணிலா
நானும் வெறும் காணலா
(யாரோ..)
(வலியே..)

படம்: தாம் தூம்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: பாம்பே ஜெயஸ்ரீ, க்ரீஷ்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam