Monday, May 24, 2010

நேரமிது நேரமிது நெஞ்சில் ஒரு பாட்டெழுத

நேரமிது நேரமிது நெஞ்சில் ஒரு பாட்டெழுத
இன்பம் என்னும் சொல் எழுத
நீ எழுத நான் எழுத
பிறந்தது பேரெழுத பிறந்தது பேரெழுத (நேரமிது)

மேகத்திலே வெள்ளி நிலா
காதலிலிலே பிள்லை நிலா
தாகம் எல்லாம் தீருவது பிள்ளையின் தாலாட்டிலா
கூண்டுக்கிளிக்கொரு ஆசை (மேகத்திலே)
பிறந்தபின்
கோலம்போடும் நேரங்கள்
நேரமிது நேரமிது நெஞ்சில் ஒரு பாட்டெழுத

திங்கள் ஒளி திங்களைப்போல்
உங்கள் பிள்ளை உங்களைப்போல்
உங்களைத்தான் நாடுகிறான்
என்னிடம் ஆசையில்லை (திங்கள்)
நீ பெற்ற பிள்ளையின்
வேகமும் கோபமும்
உன்னைப் போலத் தோன்றுதே
நேரமிது நேரமிது நெஞ்சில் ஒரு பாட்டெழுத

இன்னும் ஒன்று வேண்டுமென்று
தெய்வத்திடம் கேட்டிருந்தேன்
இந்த ஒன்றே போதுமென்றாள்
தேவி என் காதினிலே
ராத்திரி ராத்திரி தூக்கம் கெட்டாலென்ன
பிள்ளைகூட இன்பமே (நேரமிது)


திரைப்படம்: ரிஷிமூலம்
பாடியவர்கள்: சுசீலா, டி. எம். எஸ்
எழுதியவர்: கண்ணதாசன்
இசை: இளையராஜா

விரும்பிக்கேட்டவர் : ஜஸ்டிஸ் 2007

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam