Friday, September 3, 2010

தென்மேற்கு பருவக்காற்று



தென்மேற்கு பருவக்காற்று
தேனிப்பக்கம் வீசும் ஒரு சாரல் முத்துச்சாரல்
தெம்மாங்கு பாடிக்கொண்டு சிலு சிலுவென்று
சிந்துதம்மா தூரல் முத்துத் தூரல்
வெங்காத்து பக்கக்கல்லி சட்டென்று மொட்டுவிட
செங்காத்து சொல்லிச்செடி சில்லென்று பூவெடுக்க
(தென்மேற்கு..)

வானோடும் மண்ணோடும் இல்லாத வண்ணங்கள்
பெண்ணோடும் கண்ணோடும் நான் காண்கிறேன்
தாளத்தில் இல்லாத சங்கீத ஸ்வரங்கள்
பாராட்டும் உன் பாட்டில் நான் கேட்கிறேன்
மழைத்துளி என்ன தவம்தான் செய்ததோ
மலர் கொண்ட மார்போடு தொட்டதுதே
மழைத்துளி தொட்ட இடம் நீ தீண்டவோ
நினைக்கையில் உள்ளூரக் கல்லூருதே
(தென்மேற்கு..)

நீயென்றும் நானென்றும் இரு வார்த்தை ஒன்றாகி
நாம் என்ற ஓர் வார்த்தை உண்டானதே
ஆனென்றும் பெண்ணென்றும் இரு வார்த்தை ஒன்றாகி
ஆள் என்ற ஓர் வார்த்தை உண்டானதே
காதல் என்னும் மந்திரத்தின் மாயமென்ன
கல்லும் முள்ளும் இப்போது பூவானதே
வானவில்லின் துண்டொன்று மண்ணில் வந்து
யாருக்கும் சொல்லாமல் பெண்ணானதே
(தென்மேற்கு..)

படம்: கருத்தம்மா
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: சித்ரா, உன்னி கிருஷ்ணன்
வரிகள்: வைரமுத்து

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam