Wednesday, September 29, 2010

பானா காத்தாடி - தாக்குதே கண் தாக்குதே



தாக்குதே கண் தாக்குதே கண் பூக்குதே பூ பூத்ததே
பூத்ததை தான் பார்த்ததே பூங்காத்ததை கை கோர்த்ததே
கோர்த்ததை பூ ஏற்றதை தன் வார்த்தையில் தேன் வார்த்ததே
வார்த்தையில்லா பார்வையில் தான் வாய்க்கலாமோர் வாழ்க்கையே
யாரோடு யாரென்று யார்தான் சொல்வாரோ
(தாக்குதே..)

பார்த்த பொழுதே பூசல் தான் போக போக ஏசல் தான்
பூசல் தீர்ந்து ஏசல் தீர்ந்து இன்று ஹாப்பி
பெட்டை மொழிதான் ஆண் மொழி கொட்டை மொழி தான் பெண் மொழி
ஒன்றுக்கொன்று வோர்க்கவுட் ஆச்சே நல்ல கெமிஸ்ட்ரீ
வங்கக்கடலின் ஓரத்தில் வெயில் தாழாத நேரம் பார்த்து
நேசம் பூத்து பேசுதே ஏதோ ஏதோ தான்
(தாக்குதே..)

செல்லில் தினமும் சேட்டிங் தான் காப்பி ஷாப்பில் மீட்டிங் தான்
ஆனா போதும் ஆசை நெஞ்சில் பூத்ததில்லை
பஞ்சும் நெருப்பும் பக்கம் தான் பற்றிக்காமல் நிற்க்கும் தான்
பூமியின் மேல் இவர்களை போல் பார்த்ததில்லை
தீண்டும் விரல்கள் தீண்டலாம் தீண்டும்பொழுதும்
தூய்மை காக்கும் தோழமைக்கு சாட்சியே வானம் பூமிதான்
(தாக்குதே..)

படம்: பானா காத்தாடி
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்: யுவன் ஷங்கர் ராஜா
வரிகள்: நா. முத்துக்குமார்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam