Saturday, September 11, 2010

பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா



பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
குளிர் புன்னகையில் என்னை தொட்ட நிலா

பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
குளிர் புன்னகையில் என்னை தொட்ட நிலா
என் மனதில் அம்பு விட்ட நிலா
இது எட்ட நின்று என்னை சுட்ட நிலா
வாழ்நாள் தோரும் தினம்தான் காதோரம்
பாடல் கூறும்
(பொட்டு..)

ஆராத ஆசைகள் தோன்றும் என்னை தூண்டும்
ஆனாலும் வாய் பேச அஞ்சும் இந்த நெஞ்சம்
அவள் பேரை நாளும் அசை போடும் உள்ளம்
அவள் போகும் பாதை நிழல் போல செல்லும்
மௌனம் பாதி மோகம் பாதி
என்னை கொல்லும் எந்நாளும்
(பொட்டு..)

எப்போது சேராதோ பாட்டு தமிழ் பாட்டு
தோப்போடு சேராதோ காற்று பனிக்காற்று
வினா தாள் போல் இங்கே கனா காணும் காலை
விடை போலே அங்கே நடை போடும் பாவை
ஒன்றாய் கூடும் ஒன்றாய் பாடும்
போனாள் இங்கு எந்நாளோ
(பொட்டு..)

படம்: இதயம்
இசை: இளையராஜா
பாடியவர்: KJ ஜேசுதாஸ்

3 Comments:

mvalarpirai said...

ஏன்பா..இசை ,பாடியவர் பெயர மட்டும் போடுறீங்க ..
பாடலாசிரியர் பேரை போடக்கூடாடதா..அவர்தானே
இந்த அற்புதவரிகளுக்கு சொந்தகாரர்.

சீனு said...

//எப்போது சேராதோ பாட்டு தமிழ் பாட்டு//

யாப்போடு சேராதோ பாட்டு தமிழ் பாட்டு

//போனாள் இங்கு எந்நாளோ//

பொன்னாள் இங்கு எந்நாளோ

raja said...

வாலி சார் தி கிரேட்

Last 25 songs posted in Thenkinnam