Sunday, August 9, 2009

மண்ணிலே மண்ணிலே வந்து உடையுது வானம்



மண்ணிலே மண்ணிலே வந்து உடையுது வானம்
மழையிலே கரையுதே ரெண்டு மனங்களின் தூரம்
காதில் கேட்கும் இடியோசை
காதல் நெஞ்சின் பரிபாஷை
மழையை போல உறவாட
மனதில் என்ன பேராசை

நீரில் எழுதும் காதல் அழியும்
மழை நீரே எழுதிடும் காதல் அழியாதே
ஐ லவ் யூ ஷைலஜா ஷைலஜா ஓ ஷைலோ
(மண்ணிலே..)

பூ சிதறிடும் மேகம்
பொன் வானில் வருகிறதோ
ஏழு நிறங்களினால் நன்கொரு மாலை செய்கிறதோ
பூந்தாரைகள் எல்லாம் நீ பூக்களின் தோரணமா
வான் தேவதைகள் ஆசிகள் கூறும் அட்ஷதையோ
இத்தனை மழையிலும் இந்த நாணம் கரையவில்லை
கன்னி நான் நனையலாம் கற்பு நனைவதில்லை
அடி மனிதனை விடவும்
மழை துளி உயர்ந்தது
இது வரை புரியவில்லை
ஐ லவ் யூ ஷைலஜா ஷைலஜா ஓ ஷைலோ
(மண்ணிலே..)

நான் காதலை சொல்ல
என் வாய்மொழி துணை இல்லையே
தன் வார்த்தைகளால் மழைத்துளி
என் மனம் சொல்லியதே
முன் கோபுர அழகை உன் தாவணி மூடியதே
(மண்ணிலே..)

படம்: மழை
இசை: தேவிஸ்ரீபிரசாத்
பாடியவர்கள்: SPB சரண், சுமங்கலி

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam