Sunday, August 16, 2009

கேளாமல் கையிலே வந்தாயே காதலே

கேளாமல் கையிலே வந்தாயே காதலே...


கேட்டு ரசித்த பாடல் ஒன்றை
மீண்டும் இன்று ஞாபகம் தூண்ட(கேட்டு)
என்னை உன்னை எண்ணியோ யாரோ
எழுதியது போலவே தோன்ற (என்னை)

ஆண்:
கேளாமல் கையிலே வந்தாயே காதலே
என் பேரைக் கூவிடும் உன் பேரும் கோகிலம்

பெண்:
கோகிலம் கோகிலம் கோகிலம்
நெஞ்சிலே காதலின் கால் தடம்
கேளாமல் கையிலே வந்தாயே காதலே
என் ராமன் நீ எனில் உன் கையில் நான் அணில்

ஆண்:
இனிமேல் இனிமேல் இந்த
நானும் நான் இல்லை
போய் வா போய் வா என்றே
எனக்கே விடைகள் தந்தேன்

பெண்:
மெலிதாய் மெலிதாய் நான் இருந்தேன்
மிக எளிதாய் எங்கும் நடந்தேன்
இன்று உனை நெஞ்சில் சுமந்தேன் நான்
நடந்தேன் நடந்ததும் விழுந்தேன்
ஆண்:
கூந்தல் என்னும் ஏணி ஏறி முத்தமிட ஆசைகள் உண்டு
பெண்:
நெற்றி மூக்கு உதடு என்று இறங்கி வர படிகளும் உண்டு

ஆண்:
கேளாமல் கையிலே வந்தாயே காதலே
என் பேரைக் கூவிடும் உன் பேரும் கோகிலம்

கோரஸ்:
பார்த்தும் பாராமலே போகும் மேகங்களே
பார்த்தும் பாராமலே போகும் மேகங்களே
ஏதோ நடக்கின்றதே குதித்துப்போவதேன் நில்லுங்களேன்
பார்த்தும் பாராமலே போகும் மேகங்களே

பெண்:
கண்ணை கண்ணை சிமிட்டும்
நொடியில் உன் உருவம் மறையும் மறையும்
அதனால் இமைகள் வேண்டாம் என்பேன்

ஆண்:
பார்வை ஒன்றால் உன்னை அள்ளி
என் கண்ணின் சிறையில் அடைப்பேன்
அதில் நிரந்தரமாய் நீ இருக்க
இமைகள் வேண்டும் என்பேன்
பெண்:
மேற்கு திசை நோக்கி நடந்தால் இரவு கொஞ்சம் சீக்கிரம் வருமோ
ஆண்:
தூங்கும் தேவை ஏதும் இன்றி கனவுகளும் கைகளில் விழுமா

பெண்:
கேளாமல் கையிலே வந்தாயே காதலே
என் ராமன் நீ எனில் உன் கையில் நான் அணில்

ஆண்:
கோகிலம் கோகிலம் கோகிலம்
நெஞ்சிலே காதலின் கால் தடம்
பெண்:
கோகிலம் கோகிலம் கோகிலம்
நெஞ்சிலே காதலின் கால் தடம்


பாடியவர்கள் ஸ்ரீராம் பார்த்தசாரதி சைந்தவி
எழுதியவர் : தாமரை
இசை : ஏ ஆர் ரகுமான்
திரைப்படம் : அழகிய தமிழ்மகன்

2 Comments:

ஆயில்யன் said...

சில வரிகள் மட்டுமே ஞாபகத்தில் வைத்திருந்த பாடல் (கோகிலம்!)

நல்லா இருக்கு மீண்டும் கேட்கையில் :)

(ஹைய்ய்ய்ய் முத்தக்கா லேட்டஸ்ட் பாடல்கள் போட ஆரம்பிச்சுட்டாங்கடோய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்!!!)

:)))

Unknown said...

அருமையான பாடல்...

அடிக்கடி நான் கேட்டு ரசிக்கும் பாடல்.

நன்றி பகிர்ந்துகொண்டதற்க்காக.

Last 25 songs posted in Thenkinnam