Tuesday, August 11, 2009

பெண்கள் நெஞ்சை கொள்ளை கொள்ளும் வெள்ளை மாதவா



பெண்கள் நெஞ்சை கொள்ளை கொள்ளும் வெள்ளை மாதவா
உதட்டுக்கும் உதட்டும் சண்டை போடவா
உன்னிடத்தில் உள்ளதெல்லாம் அள்ளிக்கொள்ளவா
உன் உடம்புக்குள் உயிர் மட்டும் விட்டு செல்லவா
உன் வேரோடு மழை சிந்த வரவா
உன் வெட்கத்தை குளிப்பாட்ட வரவா
குளிப்பாட்ட்டி அழுக்காக்கவா வா ஏய் படவா
நீ தொடவா நான் தொடவா
ஏய் மாதவா
(பெண்கள் நெஞ்சை..)

ஏய் சண்டை போடவா
ஏய் விட்டு செல்லவா
மொட்டுக்கெல்லாம் தும்மல் வந்தா; மலர்ந்து விடும்
மோகம் வந்தால் எண்ணங்களும் திறந்து விடும்
முட்டைக்குள்ளே மஞ்சளுக்கும் கொழுப்பு இருக்கும்
உன் முடி முதல் கால் வரை கொழுப்பு இருக்கும்
விழிகள் நடந்தால் இலக்கணம் இருக்கும்
விரல்கள் நடந்தால் இலக்கியம் இருக்கும்
பட்டு கைகளால் நீ தொட்டு கிடந்தால்
பாறையும் இளமை சுரக்கும்
பாராட்டி நீராட்டவா ஏய் படவா
நீ தொடவா நான் தொடவா ஏய் மாதவா
(பெண்கள் நெஞ்சை..)

கண்ணு காது மூக்கு மட்டும் தொட்டுவிட்டு போ
கற்பை மட்டும் கொஞ்சம் காலம் விட்டு விட்டு போ
தொலைந்த என் தூக்கம் எங்கே தந்துவிட்டு போ
தலையணை சுகம் இல்லை சொல்லிவிட்டு போ
பதினெட்டு வருடம் பழுத்த என் அழகு
பதினெட்டு நொடியில் சமர்ப்பணம் உனக்கு
உன்னை கலந்தால் இன்னும் நூறு வருஷம்
நான் கொண்ட இளமை நிலைக்கும்
மூச்சத்தில் உன் பேரடா ஏய் படவா
நீ தொடவா நான் தொடவா ஏய் மாதவா
(பெண்கள் நெஞ்சை..)

படம்: ஜேஜே
இசை: பரத்வாஜ்
பாடியவர்கள்: ஜேஜே, மகாலெட்சுமி

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam