Thursday, August 20, 2009

யாதுமாகி - திகட்ட திகட்டவே காதல் தந்தாயே



திகட்ட திகட்டவே காதல் தந்தாயே
துரத்தி துரத்தியே தேட வைத்தாயே
மெல்ல எந்தன் நெஞ்சில் மயக்கம் ஒன்று தந்தாய்
சொல்ல வார்த்தை இல்லை மௌனம் ஆகிறேன்
காதல் எந்தன் வாசல் வந்ததும்
காலம் நேரம் மாறி போகுதே
கண்கள் ரெண்டும் உன்னை கண்டதும்
மீண்டும் பார்க்க சொல்லி வேண்டுதே
(திகட்ட..)

யாரை பார்த்து பேசும் போதும் உந்தன் வார்த்தை உள்ளே ஓடும்
வேறு உலகில் வாழ்ந்திட வைக்கின்றாய்
நேரில் உன்னை பார்க்கும் போதும் நாணம் ஒன்று என்னை மூடும்
கைகள் போடும் கோலம் கால்கள் போட வைக்கின்றாய்
காதல் வந்து கண்ணா மூச்சி ஆட்டம் காட்டினாய்
கண்ணை மூடி உன்னை மட்டும் பார்த்தேன்
தேடி சென்ற பட்டாம் பூச்சி கைய்யில் வந்ததே
என் அன்பே
(திகட்ட..)

காலை உந்தன் முகத்தில் விழிப்பேன்
மாலை வரையில் உன்னை நினைப்பேண்
மீண்டும் இரவில் கனவில் தொடுவேன்
தோளில் சாய்ந்து கதைகள் படிப்பேன்
மார்பில் சாய்ந்து துன்பம் மறப்பேன்
கைகள் கோர்த்து பூமி முழுதும் போக வேண்டுமே
யாதுமாகி மனதை ஏதோ செய்தாய்
மாயமாக மனதை ஏதோ செய்தாய்
காதலாகி உன்னுள் நானும் கரைந்து போகிறேன்
என் அன்பே
(திகட்ட..)

படம்: யாதுமாகி
இசை: ஜேம்ஸ் வசந்தன்
பாடியவர்: தீபா மரியம்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam