Friday, February 11, 2011

மனதில் உறுதி வேண்டும்



மனதில் உறுதி வேண்டும்
வார்த்தையிலே தெளிவும் வேண்டும்

மனதில் உறுதி வேண்டும்
வார்த்தையிலே தெளிவும் வேண்டும்
உணர்ச்சி என்பது வேண்டும்
ஒளி படைத்த பார்வை வேண்டும்
ஞான தீபம் ஏற்ற வேண்டும்
(மனதில்..)

இடை வரும் பலவித தடைகளை தகர்த்திங்கு வாழ்ந்து காட்ட வேண்டும்
இலக்கிய பெண்ணுக்கு இலக்கணம் நீயென யாரும் போற்றவேண்டும்
மாதர் தம்மை கேலி பேசும் மூடர் வாயை மூடுவோம்
மானம் காக்கும் மாந்தர் யாருக்கும் மாலை வாங்கி போடுவோம்
ஏசினாலும் பேசினாலும் அஞ்சிடாமல் வாழ வேண்டும்
(மனதில்..)

சமைக்கின்ற கரமிங்கு சரித்திரம் படைப்பதை பூமி பார்க்க வேண்டும்
தூரத்து தேசத்தில் பாரத பெண்மையின் பாடு கேட்கவேண்டும்
பெண்கள் கூட்டம் பேய்கள் என்று சொன்ன சித்தர்களும்
ஈன்ற தாயும் பெண்மையென்று எண்ணிடாத பித்தர்களே
வீடு ஆளும் பெண்மையிங்கு நாடு ஆளும் காலம் வேண்டும்
(மனதில்..)

படம்: மனதில் உறுதி வேண்டும்
இசை: இளையராஜா
பாடியவர்: KJ ஜேசுதாஸ்
வரிகள்: பாரதியார்

1 Comment:

Anonymous said...

என்னை கை கொடுத்து தாங்கிக் கொண்டிருக்கும் என் பாரதியின் பாடல் எனக்கு பிடித்த மிகவும் பிடித்த பாடல்..

Last 25 songs posted in Thenkinnam