Monday, February 14, 2011

கரவ மாடு மூனு



கரவ மாடு மூனு
காள மாடு ஒன்னு
அடிச்சேன் லக்கி ப்ரைஸு
அதிர்ஷ்ட காரன் நானு
சுகவாசி ஆட்டம் போடும் நேரம்
மனசுல வெளவாசி போல போதை ஏறும்
(கரவ..)

தூங்கவில்லை நெடு நாளா
தென்றல் தாக்கியதே கொடுவாலா
தூங்கவில்லை நெடு நாளா
தென்றல் தாக்கியதே கொடுவாலா
நான் இருந்தேன் தனி ஆளா
இன்று நாம் கலக்கும் கும்ப மேளா
தாமரை மேனி தீண்டிடும் தேனி நானடி ராணி
என்னை நாடியே வா நீ
நீ என்னை கொஞ்சம் கொஞ்சும் நேரம்
இன்பம் இன்பம் ஆரம்பம்

அடிச்சா பாரு கண்ணு ஐயர் ஆத்து பொண்ணு
மடிசார் கட்டும் ராணி மயிலாப்பூருக்கு வா நீ
விளக்கேத்தும் சாயங்கால நேரம்
மனசுல உருவாச்சு உன்னால் ஒரு பாரம்
அடிச்சா பாரு கண்ணு ஐயர் ஆத்து பொண்ணு
மடிசார் கட்டும் ராணி மயிலாப்பூருக்கு வா நீ ஈஈஈ...

நான் உன்னை நெனச்சு ஏங்கினேன்
முள் மேல படுத்து தூங்கினேன்
ஆனாலும் அசடு..
ஆனாலும் அசடு நீங்க தான்
வாங்கொண்ணா மடியில் தூங்கத்தான்
சிந்தாமனி செம்மாங்கனி என்னாளும் நீ என் மோகினி
ஆச தீர கட்டுங்கோ கோந்து போல ஒத்துங்கோ
நேக்கு தான் என்னவோ பண்றதே தொட தொட

வயசு பொண்ண மாமோ
வளச்சு கட்டு பாப்போம் அ அ அ அ
தேங்கப்பால தேடி வந்ததிந்த ஆப்பம்
சவடால சைட் அடிச்சா நேத்து
எதிரிலே சமஞ்சாடும் சாத்தி பூவ பாத்து

அடியே ஆத்தா நீ நாட்டுக்கட்ட
புடிச்சேன் பாரு வந்து மாட்டி கிட்ட
அடடா ராசா உன் அழக எண்ணி
நெடுநாள் ஆச்சு நான் நாஷ்தா பண்ணி
அடியே குப்ப குளம் நீ கூட்டும்போது
இடுப்ப பார்க்காதவன் ஆபிஸ்ல ஏது
முன்னால் உள்ளது சிங்காரம் பின்னால் உள்ளது ஒய்யாரம்
கண்ணால் கண்டதும் அள்ளாரும்
தன்னால் போடணும் கிண்ணாரம்
அட சும்மா இப்படி நின்னா எப்புடி மாமோ
(கரவ..)

படம்: மகளிர் மட்டும்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், S ஜானகி

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam