Monday, February 21, 2011

ஆகாயம் பூமி என்றும் ஒன்றா?

ஆகாயம் பூமி என்றும் ஒன்றா?
நீ அந்த வானம்
நானிந்த பூமி
ஒன்றென்று யார் சொல்வார்

என்னை நானேஏ ஏ
கேட்கின்ற கேள்வி இது - நானே
கேட்கின்ற கேள்வி இது

சாமந்திப்பூவோ எட்டாத தூரம்
ஊமத்தம்பூவோ என் வீட்டின் ஓரம்
இதில் வாசம் இல்லை
என்னெஞ்சில் பாசம் இல்லை
அது பக்கம் இல்லை
நான் சூட யோகம் இல்லை
இது மேடை இன்றி ஆடும் நாடகம்
வானத்து மீனை
வலைபோடச் சொன்னால் நானெங்கு போவதம்மா?

(ஆகாயம் பூமி)




தேகங்கள் பேதங்கள் பேசும்
நாம் வாழும் நாட்டில்
ஏனிந்த காதல்
இது சேரிக்காற்று
ஊருக்கு ஆகாதம்மா
இது ஏரித்தண்ணீர்
முத்துக்கள் இங்கேதம்மா
கடல் மீனும் வானில் நீந்துமா
நீ கொண்ட காதல்
நேரல்ல கானல்
தாகத்தை தீர்ப்பதுண்டோ?

(ஆகாயம் பூமி)

திரைப்படம் : சாமந்திபூ
இசை: மலேசியா வாசுதேவன்
பாடியவர் : மலேசியா வாசுதேவன்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam