Wednesday, February 3, 2010

முந்தினம் பார்த்தேனே - மாயா நீ மாயா



தேடித் தேடியே மின்னல்
உள் நெஞ்சில் பாய்கிறதே
ஓடும் காலமே சட்டென
எனை நின்றுப் பார்க்கிறதே
சுற்றும் பூமியே என்னை
ஒரு வட்டம் இடுகிறதே
உனை பார்க்கும்போதே
பார்க்கும்போதே பார்க்கும்போதே

மாயா நீ மாயா தீ வைத்தாயா
மாயா இல்லை மெய்யா உன் அனலாலே
சரிகம எனை தகித்தாயே
உன் நினைவாலே மனதினில் பனி பொழிந்தாயே
பார்வையாலே காயம் ஆனேன்
மூங்கில் பாட்டானேன்
மாயா ஆடிப் பாடி வரும் வன்முறையா நீ
 மாயா பிஞ்சு குழந்தையின் முதல் சிரிப்பாநீ

நா னா
மெல்ல மெல்ல கொல்லும் வஞ்சகமா – நீ
கேட்டு விட்டு சென்ற விடுகதையா – நீ

நா னா

சத்தம் இன்றி நானா உள்ளம் கலைந்தேனா
உன்னில் கனிந்தேனா சித்தம் சிதைத்தேனா
எங்கும் நிறைந்தேனா
கோடி சூரியனை போல் நெஞ்சில் உதித்தாய்
கொஞ்சும் வெண்ணிலவைப் போல் என்னில் மலர்ந்தாய்
(பார்வையாலே..)
ஏதோ ஏதோ புது மாற்றம்
உன் கண்ணில் தெரிகிறதோ
உனை விட்டுச் செல்கிறதோ
வேறு வேறு நாம் இல்லை
என காற்றும் சொல்கிறதோ

நம்மை பார்க்கும்போதே பார்க்கும்போதே
பார்க்கும்போதே பார்க்கும்போதே

ஏதோ ஏதோ புது மாற்றம்
உன் கண்ணில் தெரிகிறதா
மௌனமாக உன் இதயம்
உனை விட்டுச் செல்கிறதா
வேறு வேறு நாம் இல்லை
என காற்றும் சொல்கிறதா
நம்மை பார்க்கும்போதே பார்க்கும்போதே
பார்க்கும்போதே பார்க்கும்போதே

மாயா
உயிர் என்பாயா
உறவென்பாயா
காத்திருந்தாயா
ஓ..

படம்: முந்தினம் பார்த்தேனே
இசை: தமன்
பாடியவர்கள்: நரேஷ் ஐயர், ஜனனி
வரிகள்: ரோகிணி

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam