Tuesday, February 23, 2010

என்னமோ நடக்கிறதே எனக்கு பிடிக்கிறதே



என்னமோ நடக்கிறதே எனக்கு பிடிக்கிறதே
என்னமோ நடக்கிறதே எல்லாம் பிடிக்கிறதே
(என்னமோ..)
யார் யாரோ ஏதோ பேச
யார் யாரோ ஏதோ கேட்க
உன் குரலாய் எல்லாம் கேட்கிறதே
யார் யாரோ எதிரே தோன்ற
யார் யாரோ கடந்து போக
உன்னைப்போல் எல்லாம் தெரிகிறதே

காதல் வந்து கண்ணுக்குள்ளே கூடு கட்டியதே
கல்லை போல பூவை வைத்து வீடு கட்டியதே
காதல் செய்த மடையா என்று காதல் திட்டியதே
கதவை மூடி வைத்தாப்போதும் ஜன்னல் தட்டியதே
(என்னமோ..)

ஒரு பார்வை..
ஒரு பார்வை..
அது மலை மேலே தலை கீழாய் தள்ளும்
மறு பார்வை..
மறு பார்வை..
அது மீண்டும் என்னை மேலே வர சொல்லும்
அடடா என்னை மாட்டி விட்டாளே
அழகாய் ஆபத்தில் மாட்டி விட்டாளே
தோளோடு ரெக்கை முளைக்குதே
இது மாயம் மந்திரம் இல்லையே
அட காதல் தொல்லை
(என்னமோ..)

முதல் முதலாய்
மெல்ல தயங்கி..
நேற்று பூ கடையில் பூக்கள் வாங்க நின்றேன்
இன்று வளையல் கடை பார்த்து
உந்தன் கை அளவை காற்றில் நானும் வரைந்தேன்
என் பேர் என்ன யாரோ என்னை கேட்க
உன் பேர் சொல்லி உதட்டினை கடித்தேன்
எங்கோ நான் பிறந்து வந்தது
உன்னோடு சேர்ந்து வாழவா
இரு இதயம் என்னுள் துடிக்கிறதே
இத காதலாலே
(யார் யாரோ..)
(என்னமோ..)

படம்: சண்டைக்கோழி
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: ஷான்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam