Monday, February 22, 2010

வா வா பூவே வா



வா வா பூவே வா
உன் வாசம் பார்க்க வேண்டும் வா
தென்றல் வரும் சாலை மீது நீ வா
வா வா என்பே வா
என் வாசல் உன்னை தேடும் வா
வசந்தத்தில் முத்தம் கொண்டு வா வா

எதிர் பார்க்கிறேன் மனம் வேர்க்கிறேன்
பூங்காற்றாய் நீ வா
மழை காலமே புது ஓடை நான்
ஒரு வெள்ளம் போல் வா
அடி இன்னும் இன்னும் பக்கம் கொஞ்சம் வா
(வா வா..)

உன்னைப் பார்த்த பூக்கள் கண்ணை மூடவில்லை
அதிசய பெண்ணே நீ வா வா வா
உன்னை பார்த்த பின்னே கைகள் ஓடவிலலி
அருகினில் நீ கொஞ்சம் வா வா வா
உன் புன்னகை அதை காசைப்போல்
நான் சேர்ப்பேனே வா
உன் தோள்களில் தலை சாயவே
நான் பூத்தேனே வா
நீ காதல் வானவில்லாக
அதில் காணும் வண்ணம் நானாக
உன் அழகை பருக அழகே நீ வா
(வா வா..)

தங்கக்கட்டில் போடு என்னை கையில் சேறு
மூச்சினில் தீ மூட்டு வா வா வா
வண்ண சிற்பம் பார்த்து கண்கள் பசி ஆச்சு
தாமதம் ஆகாது வா வா வா
நீ வேண்டவும் விரல் தூண்டவும்
ஒரு பூவானேன் வா
உன் மடியிலே நான் இரவிலே கண் மூடவா
உன் தோள்கள் ரெண்டும் கிளையாக
நான் பஞ்ச வர்ண கிளியாக
சுக கதைகள் சொல்ல அருகே நீ வா
(வா வா..)

படம்: ரிஷி
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: ஹரிஹரன், S ஜானகி

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam