செஞ்ஞோரித்தா செஞ்ஞோரித்தா
செஞ்ஞோரித்தா செஞ்ஞோரித்தா
செஞ்ஞோரித்தா செஞ்ஞோரித்தா
ஓ செஞ்ஞோரித்தா பேசும் மெழுகு பொம்மையே
ஓ செஞ்ஞோரித்தா பேசும் மெழுகு பொம்மையே
ஓ செஞ்ஞோரித்தா பேசும் மெழுகு பொம்மையே
ஓ செஞ்ஞோரித்தா யே யே
மஞ்சள் நிற மலர் உன்னை நனைக்க தானடி
கொஞ்சி கொஞ்சி பொழியுது குளிர்ந்த மழை
மின்னுகின்ற அழகுடல் குளிக்க தானடி
பின்னி பின்னி நடக்குது நதியின் அலை
அடடா பிரம்மன் புத்திசாலி
அவனை விட நான் அதிர்ஷ்டசாலி ஓஹோ
(அடடா..)
(ஓ செஞ்ஞோரித்தா..)
அடி உன் மூச்சினை மெல்ல நான் கேட்கிறேன்
அந்த ஓசைக்கு இணையான இசை இல்லையே
உந்தன் கூந்தல் முடி கொஞ்சம் அசைகின்றதே
அந்த அசைவுக்கு நடனங்கள் இணையில்லையே
சிற்பம் கவிதை ஓவியம் மூன்றும் சேறும்
கண்டேன் பெண்ணே நான் உன்னிடம்
பெண்ணேல்லாம் பெண் போல இருக்க
நீ மட்டும் என் நெஞ்சை மயக்க
பூமிக்கு வந்தாயே தேவதை போலவே
(அடடா..)
(ஓ செஞ்ஞோரித்தா..)
ஒரு மழை காலத்தில் முன்பு குடை தேடினேன்
இன்று உன்னை தேடி தவிக்கின்றேன் ஏன் சொல்லடி
ஒரு வெயில் காலத்தில் முன்பு நிழல் தேடினேன்
இன்று உன்னை தேடி தவிக்கின்றேன் ஏன் சொல்லடி
பெண்ணே எந்தன் வானிலே உன்னால் மாறி போனதோ
தரை கீழாக ஏன் ஆனதோ
தெரியாமல் என் நெஞ்சில் நுழைந்து
அறியாத மாயங்கள் செய்தாய் ஏனடி
(ஓ செஞ்ஞோரித்தா..)
படம்: பூவெல்லாம் கேட்டுப்பார்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்: உன்னி கிருஷ்ணன்
Saturday, February 20, 2010
ஓ செஞ்ஞோரித்தா பேசும் மெழுகு பொம்மையே
பதிந்தவர் MyFriend @ 1:52 AM
Subscribe to:
Post Comments (Atom)
1 Comment:
//செஞ்ஞோரித்தா//
Sen(y)orita
//சிற்பம் கவிதை ஓவியம் மூன்றும் சேறும்
கண்டேன் பெண்ணே நான் உன்னிடம்
//
சிற்பம் கவிதை ஓவியம் மூன்றும் சேறும் "ஓரிடம்"
கண்டேன் பெண்ணே நான் உன்னிடம்
//பெண்ணேல்லாம் பெண் போல இருக்க//
பெண்ணேல்லாம் பூப்போல(?) இருக்க
//தரை கீழாக ஏன் ஆனதோ//
தலைகீழாக
//தெரியாமல் என் நெஞ்சில் நுழைந்து
அறியாத மாயங்கள் செய்தாய் ஏனடி//
ஒரு வரி மிஸ்ஸிங்.
தெரியாமல் என் நெஞ்சில் நுழைந்து
"புரியாத இன்பங்கள் கலந்து" (Not sure)
அறியாத மாயங்கள் செய்தாய் ஏனடி?
Post a Comment