Wednesday, February 17, 2010

கனவெல்லாம் நீதானே விழியே உனக்கே உயிரானேன்

கனவெல்லாம் நீதானே விழியே உனக்கே உயிரானேன்
நினைவெல்லாம் நீதானே கலையாத யுகம் சுகம்தானே
பார்வை உன்னை அலைகிறதே
உள்ளம் உன்னை அணைக்கிறதே
அந்த நேரம் வரும்பொழுது என்னை வதைக்கின்றதே
(கனவெல்லாம்..)

சாரல் மழைத்துளியில் உன் ரகசியத்தை வெளிப்பார்த்தேன்
நாணம் நான் அறிந்தேன் கொஞ்சம் பனிப்பூவாய் நீ குறுக
எதை அறியாமல் மனம் பறித்தாய் உனை மறவேனடி
நிஜம் புரியாத நிலை அடைந்தேன் எது வரை சொல்லடி
காலம் தோறும் நெஞ்சில் வாழும் உந்தன் காதல் ஞாபகங்கள் தினம் தினம்
(கனவெல்லாம்..)

தேடல் வரும் பொழுது என் உணர்வுகளும் கலங்குதடி
காணலாய் கிடந்தேன் நான் உன் வரவால் விழித்திருந்தேண்
இணைப்பிரியாத நிலைப்பெறவே நெஞ்சில் யாகமே
தவித்திடும் போது ஆறுதலாய் உன் மடி சாய்கிறேன்
காலம் தோறும் நெஞ்சில் வாழும் உந்தன் காதல் ஞாபகம் தினம் தினம்
(கனவெல்லாம்..)

ஆல்பம்: கனவெல்லாம்
இசை: திலீப் வர்மன்
பாடியவர்: திலீப் வர்மன்
வரிகள்: திலீப் வர்மன்

1 Comment:

Anonymous said...

Gud 1 :-)

Last 25 songs posted in Thenkinnam