கண்ணுக்கு மை அழகு
கவிதைக்கு பொய் அழகு
அவரைக்கு பூ அழகு
அவருக்கு நான் அழகு
(கண்ணுக்கு..)
மழை நின்ற பின்னாலும் இலை சிந்தும் துளி அழகு
அலை மீண்டு போனாலும் கரை கொண்ட நுரை அழகு
இமை கொட்டும் விண்மீன்கள் இரவோடு தான் அழகு
இளமாறும் கண்ணுக்கு எப்போதும் நான் அழகு
(கண்ணுக்கு..)
ஆனந்த மஞ்சத்தில் அவழ்ந்தாலும் அழகு
அடையாள முத்தத்தில் அழிந்தாலும் பொட்டு அழகு
பென்ணோடு காதல் வந்தால் பிறை கூட பேரழகு
என்னோடு நீ இருந்தால் இருள் கூட ஓர் அழகு
(கண்ணுக்கு..)
படம்: புதியமுகம்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: P சுசீலா
Sunday, February 28, 2010
கண்ணுக்கு மை அழகு (பெண்)
பதிந்தவர் MyFriend @ 1:01 AM
வகை 1990's, AR ரஹ்மான், P சுசீலா
Subscribe to:
Post Comments (Atom)
1 Comment:
//ஆனந்த மஞ்சத்தில் அவழ்ந்தாலும் அழகு//
ஏதோ ஒரு வார்த்தை மிஸ்ஸிங்
Post a Comment