Sunday, January 16, 2011

பொங்கலு பொங்கலு




பொங்கலு பொங்கலு வெக்க மஞ்சள மஞ்சள எடு
தங்கச்சி தங்கச்சி தங்கச்சி தங்கச்சி
புஞ்சையும் நஞ்சையும் இந்த பூமியும் சாமியும் இனி
நம் கட்சி நம் கட்சி நம் கட்சி

பூப்பூக்கும் மாசம் தை மாசம்
ஊரெங்கும் வீசும் பூவாசம்
சின்னக் கிளிகள் பறந்து ஆட
சிந்துக் கவிகள் குயில்கள் பாட
புது ராகம் புது தாளம்
வந்து சேரும் நேரம் இந்நேரம்
(பூப்பூக்கும்..)

வாய்காலையும் வயற்காட்டையும்
படைத்தான் எனக்கென காதல் தேவதை
தெம்மாங்கையும் தெருக்கூத்தையும்
நினைத்தால் இனித்திடும் வாழும் நாள் வரை
குழந்தைகள் கூட குமரியும் ஆட
மந்த மாருதம் வீசுது மலையமாருதம் பாடுது
ஓஹோ
(பூப்பூக்கும்..)

நான் தூங்கியே நாளானது
அது ஏன் எனக்கொரு மோகம் வந்தது
பால் மேனியும் நூலானது
அது ஏன் அதுக்கொரு தாகம் வந்தது
மனதினில் கோடி
நினைவுகள் ஓடி
மன்னன் யாரென தேடுதோ
உன்னைப்பார்த்ததும் கூடுதோ?



படம்: வருஷம் 16
இசை: இளையராஜா
பாடியவர்: P சுசீலா
வரிகள்: வாலி

2 Comments:

வில்லனின் விநோதங்கள் said...

வாய்க்காளையும்???

வில்லனின் விநோதங்கள் said...

நான் தூங்கியே நாளானது

அது ஏன் எனக்கொரு மோகம் வந்தது

பால் மேனியும் நூலானது

அது ஏன் அதுக்கொரு தாகம் வந்தது

என்ற மூன்றாவது பல்லவியை காணோமே?

Last 25 songs posted in Thenkinnam