Friday, January 21, 2011

கனவிலே கனவிலே பல நாள் கண்டது



கனவிலே கனவிலே பல நாள் கண்டது
எதிரிலே எதிரிலே அழகாய் வந்தது
எதுவும் பேசாமலே உரைப்பேன் என் காதலை
விழிகள் மூடாமலே ரசிப்பேன் பெண் சாரலை
அவள் என் வாசமே என்னும் சங்கதியாய்
எட்டு திசைகளும் அதிருமே

சிறு புன்னகையில் எனை வென்றுவிடும் அவள் தென்றலை
இரு கண்களையும் எழில் செய்துவிடும் அவள் மின்னலை

காலை மாலை யாவுமே
காதல் கொள்ள வேணுமே
தினம் பேசி போகிற ஜாடைகள்
பல நூறு கவி சொல்லுதே

இரவே பகலே இரவாய் தோன்றிடு
நிலவே நிலவே பகலை நீங்கிடு
மூச்சுக் குழலிலே மோகம் விரியுதே
கூச்சம் தொலையவே தேகம் சரியுதே
(கனவிலே..)

உடை தொட்ட இடம் விரல் தொட்டுவிட்ட உயிர் கெஞ்சுமே
அடைப்பட்ட நதி உடைப்பட்டுவிட அலை பொங்குமே
வேகம் வீசும் பூவிலே நாளும் உந்தன் வாசனை
மிதமான சூரிய தீபமாய் இமை நாங்கும் ஒளி சிந்துமே

எது நீ எது நான் இனிமேல் தேடுவோம்
நதி நீ கரை நான் கலைந்தே ஓடுவோம்
பூக்கள் முழுவதும் மீண்டும் விரியுமே
கூட்டம் நடத்துமே பூக்கும் அழகிலே
(கனவிலே..)

படம்: நேபாளி
இசை: ஸ்ரீகாந்த் தேவா
பாடியவர்கள்: சத்யன், ஷ்வேதா, கிரேஷ்
வரிகள்: யுகபாரதி

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam