Thursday, January 27, 2011

கனவே கலைகிறதே



கனவே கலைகிறதே
காற்றென வலிகள் நுழைகிறதே
தேவதை
சிறகில் இறகாய் உயிரும் உதிர்க்கிறதே ஏய்
காதல் இது தானா
உலகமெல்லாம்
வலிகள் பொது தானா
மனசுக்குள்
அணில் பிள்ளை போல
அழுவதும் அது தானா
வார்த்தைகளை
மௌனம் கொன்று தின்றதில்
தனிமையிலே
தினம் கத்தி கத்தி
உந்தன் பெயர் சொல்லி அழுதேனே
காற்று வந்து காதல் சொன்னதா

இதுதானா காதல் இதுதானா
வேர் அறுந்து வீசும் புயல் தானா
உதுதானா காதல் இதுதானா
அணு அணுவாய் சாகும் வழி தானா
(கனவே..)

அழைப்பது காணல் நீரா
அறியாது பறவை கூட்டம்
தொடுவானம் போலே காதல்
அழகான மாய தோற்றம்
உனக்கான வார்த்தை தனி
ஆயுள் சிறையில் வாழ்கிறதே
நமக்கென விண்மீன்
நீ அறியும் முன்பே உதிர்கிறதே
தரையில் மோதி மழைத்துளி சாகும்
விரலினை தேடி இமையோடு கண்ணீர் காயும்
வலிக்கின்ற போதும் சிரிக்கின்ற நானும்
உனக்காக நாளும் தேய்கிறேன்

சரிதானா காதல் பிழைதானா
ஆயுள் வரை தொடரும் வலிதானா
இதுதானா காதல் இதுதானா
ஐம்புலனில் ஐயோ தீயானாள்

மழை நீர் சுடுகிறதே
மனசுக்குள்
அணில் பிள்ளை அழுகிறதே
தேவதை சிறகில் இறகாய்
உயிரும் உதிர்கிறதே

படம்: அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்: யுவன் ஷங்கர் ராஜா

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam