Sunday, January 30, 2011

பூசு மஞ்சள் பூசு மஞ்சள் (ஆண்)



பூசு மஞ்சள் பூசு மஞ்சள் பூசிய பூவொன்னு
பூமியோடு போன பின்னும் பூத்தது ஏன் இங்கு
என் கண்கள் பொய் சொல்லுமா
வேரில்லாமல் பூப்பூக்குமா
கண்ணோடு ஆனந்தமா
நெஞ்சோடு பூகம்பமா
பிம்பமா உன் போலே பிம்பமா
நம்புமா என் உள்ளம் நம்புமா
(பூசு மஞ்சள்..)

உயிர் நீங்கி போனவளே
என் உயிர் வாங்கி போனவளே
என் உயிர் போன தேகம் மட்டும் நடமாடுது
பாரம்மா என் வாழ்வை பாரம்மா
நீ தந்த காயங்கள் நெஞ்சோடு ஆறுமுன்னே
அழகான வாளொன்று அதை கீருதே
தாங்குமா என் உள்ளம் தாங்குமா
உன் போன்ற புன்னகையால் என் வாழ்வை குடிப்பது யார்
உன் போன்ற பார்வையினால் என் கண்ணை எரிப்பவள் யார்
ஒரு விடுகதையே இங்கு தொடர்கதையா
அந்த விடையின் முதல் எழுத்தை
எந்தன் விதி வந்து மறைத்ததே
பொங்குதே கண்ணீரும் பொங்குதே
கண்களில் உன் பிம்பம் தங்குதே
(பூசு மஞ்சள்..)

வடக்கே ஒரு அஷ்டமனம்
தெற்கே ஒரு சந்திரோதயம்
ஆகாயம் என்னோடு திசை மாறுதே
உண்மையா நான் என்ன பொம்மையா
ஒரு ஜென்மம் வாங்கி வந்து
இரு ஜென்மம் வாழுகின்றேன்
இது என்ன கதை என்று விதி கேட்குதே
மாறுமா என் கண்ணீர் மாறுமா
எங்கேயோ தொலைந்த விதை
இங்கே வந்து பூத்தன
முல்லைப்பூ என்றிருந்தேன்
முள்ளை பாய்கிறதே
நான் ஓட நினைக்க
நிழல் என்னை துரத்த
உயிர் தழைக்கும் பயணம்
எந்த திருப்பத்தில் முடியும்
ஓய்ந்ததே என் கால்கள் ஓய்ந்ததே
தீர்ந்ததே கண்ணீரும் தீர்ந்ததே
(பூசு மஞ்சள்..)

படம்: கனவே கலையாதே
இசை: தேவா
பாடியவர்: ஹரிஹரன்
வரிகள்: வைரமுத்து

2 Comments:

MANO நாஞ்சில் மனோ said...

அடடடா அப்போ இப்பிடியும் ஒரு பதிவு போடலாமா ஹா ஹா ஹா ஹா ஹா......

MANO நாஞ்சில் மனோ said...

எனக்குதான் வடையா................

Last 25 songs posted in Thenkinnam