Thursday, January 13, 2011

தாழம்பூவே வாசம் வீசு

தாழம்பூவே வாசம் வீசு
தாயின் தாயே கொஞ்சிப்பேசு
இரவும் இல்லே பகலும் இல்லே
அன்புக்கு பஞ்சமில்லே
தாலேலோ தாலேலோ

தாழம்பூவே வாசம் வீசு
தாயின் தாயே கொஞ்சிப்பேசு

நடந்தா காஞ்ச நிலம் செழிக்கும்
சிரிச்சா கோயில் மணி அடிக்கும்
கண்ட கண்ணு படும்

பேசும் போது தாயப் பார்த்தேன்
தோளில் தூங்கும் பிள்ளை ஆனேன்

நெஞ்சத்திலே ஏஏ
நெஞ்சத்திலே ஊஞ்சல் கட்டி
ஆரிரரோ பாடவோ

தாழம்பூவே வாசம் வீசு
தாயின் தாயே கொஞ்சிப்பேசு
வீடெதும் இல்லே வாசலுமில்லே
அன்புக்கு பஞ்சமில்லே
தாலேலோ தாலேலோ

தாழம்பூவே வாசம் வீசு
தாயின் தாயே கொஞ்சிப்பேசு

இனி நான் கோடி முறை பொறப்பேன்
உன நான் பார்க்க விழி தொறப்பேன்
இது சத்தியமே



நீரும் போனா மேகம் ஏது
நீயும் போனா நானும் ஏது
என்னுயிரே ஏஏ

என்னுயிரில் நீ இருக்க
உன்னுயிரும் போகுமோ
(தாழம்பூவே வாசம் வீசு)

துபாய் ரங்கனின் நேயர் விருப்பமாக ..

திரைப்படம் : கைகொடுக்கும் கை
பாடியவர்கள் : SPB , S .ஜானகி
இசை: இளையராஜா



Get Your Own Hindi Songs Player at Music Plugin

2 Comments:

சென்ஷி said...

ரொம்பப் பிடிச்ச பாட்டு :)))))))))))

நன்றிகள் பலப்பல...

வெங்கட் நாகராஜ் said...

எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று. ரசித்த பாடல் வலைப்பூவில் போட எடுத்து வைத்திருந்தேன். :)

பகிர்வுக்கு நன்றி.

Last 25 songs posted in Thenkinnam