Monday, January 17, 2011

மீட்டாத ஒரு வீணை



மீட்டாத ஒரு வீணை எனை மீட்டும் நேரம்
புதிரான ஒரு பாடல் பொருள் சொல்லும் நேரம்
ஆகாய பூக்கள் மழை தூவும் நேரம்
மனதின் ராகம்
(மீட்டாத..)

பளிங்கினால் ஒரு வீடு அமைக்க வா பொன்மானே
விழியினால் இரு தீபம் ஏற்றவா அது போலே
மறந்த அந்த பாடலுக்கு அடி எடுத்து கொடுக்க வா
பிரித்து என்னை பரிதவித்து புதுக்கவிதை படிக்க வா
எரிமலையும் பனிமலை என்றே மாறுது ஏ பைங்கிளி
(மீட்டாத..)

கனவிலே துயில் நீங்கி திரும்பினால் உன் உருவம்
முழு நிலா முகம் பார்க்க மலர்ந்ததே உன் வடிவம்
நடந்து செல்லும் வழி முழுதும் என் நிழலை அனுப்பவா
துணைக்கு வந்த நிழல் அதற்கு குடை எடுத்து பிடிக்கவா
ஒரு கணமும் பல யுகம் என்றே ஆகுது சொல் பைங்கிளி
(மீட்டாத..)

படம்: பூந்தோட்டம்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: ஹரிஹரன், மகாலெட்சுமி ஐயர்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam