தூது செல்ல ஒரு தோழி இல்லையென
துயர் கொண்டாயோ தலைவி
துள்ளும் காற்று வந்து மெல்ல சேலை தொட
சுகம் கண்டாயோ தலைவி
அன்று சென்றவனை இன்னும் காணவில்லை
என்ன செய்வதடி தோழி
தென்றல் தொட்டதடி திங்கள் சுட்டதடி
கண்கள் வாடுதடி தோழி
பன்னீர் நதியில் குளித்து வந்தாலும்
பருவம் தூங்குமே தலைவி
வெந்நீர் நதியை பன்னீர் நதியாய்
பேசலாகுமோ தலைவி
இடையணி மேகலை விழுந்திடும் வண்ணம்
ஏங்கலாகுமோ தலைவி
கடை இருந்தும் பொருள் கொள்வோர் இல்லையே
கலக்கம் வாராதோ தோழி
முத்தும் மணியும் கருகிடும் வண்ணம்
மோகத்தில் ஆழ்ந்தாள் தலைவி
முத்தத்தை மறந்தவள் சித்தத்தில் இருந்த்தை
மெளனத்தில் அறிந்தாள் தோழி
காவிரிக்கரையின் ஓரத்தில் எவ்விதம்
காத்திருந்தாள் அந்த தலைவி
காவிய நாயகன் காதலன் வணிகன்
கோவலன் என்பாள் மனைவி
படம்: பச்சை விளக்கு
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்-ராமமூர்த்தி
பாடல்: கண்ணதாசன்
பாடியவர்கள்: பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி
1 Comment:
தென்றல் வீசும் பாடல்...
Post a Comment