இதயம் போகுதே எனையே பிரிந்தே
காதல் இளங்காற்று பாடுகின்ற பாட்டு
காதல் இளங்காற்று பாடுகின்ற பாட்டு கேட்காதோ
மணியோசை கேட்டு மகிழ்வோடு நேற்று
கைகள் தட்டிய காலை சென்றதெங்கே
அரும்பான என் காதல் மலராகுமோ
மலராகி வாழ்வில் மணம் வீசுமோ
சுடுநீரில் விழுந்து துடிக்கின்ற மீன் போல்
தோகை நெஞ்சினில் சோகம் பொங்குதம்மா
குயில் கூவ வசந்தங்கள் உருவாகுமோ
வெயில் தீண்டும் பூவில் பனி நீங்குமோ
மலைச்சாரல் ஓரம் மயிலாடும் நேரம்
காதல் சொல்லவும் தேவன் இல்லையம்மா
நிழல் போல உன்னோடு நான் சங்கமம்
தரவேண்டும் வாழ்வில் நீ குங்குமம்
படம்: புதிய வார்ப்புகள்
இசை: இளையராஜா
பாடல்: கங்கை அமரன்
பாடியவர்: ஜென்சி
2 Comments:
தாலாட்டும் பாட்டு... (வருத்தத்துடன்)
அழகான வரிகளில்
மயக்கும் குரலில்
இசை அரசனின் அற்புதமான
இசையில்..
பாடலை கேட்கும் போது
மனம் பரவச நிலையை
முழுமையாய் அடைந்ததை
உணர முடிகிறது!!!
Post a Comment