Friday, February 1, 2013

துடிக்கின்ற காதல்



மனமே திகைக்காதே
துடிக்கின்ற காதல் தும்மலை போன்றது
எப்பவும் வரலாம் எவர் கண்டார்
துடிக்கின்ற காதல் தும்மலை போன்றது
எப்பவும் வரலாம் எவர் கண்டார்

இதயத்தின் ஜன்னல் சாத்தியே கிடக்கும்
எப்பவும் திறக்கும் எவர் கண்டார்
துடிக்கின்ற காதல் தும்மலை போன்றது
எப்பவும் வரலாம் எவர் கண்டார்

மனமே திகைக்காதே

உனை பார்த்த நிமிஷத்தில் இருவிழி நிலைத்ததை
இமைகளை தொலைத்ததை எவர் கண்டார்

உனை பார்த்த நிமிஷத்தில் உடல் மெல்ல குளிர்ந்ததை
உயிர் கொஞ்சம் உறைந்ததை எவர் கண்டார்
மனமே திகைக்காதே

இனி முத்தங்களால் தினம் குளிக்கலாம்
எவர் கண்டார் எவர் கண்டார்

என் முந்தானைக்குள் நீ வசிக்கலாம்
எவர் கண்டார் அதை எவர் கண்டார்

மாலை வந்து சேரும் முன்னே
பிள்ளை வந்து சேரலாம் எவர் கண்டார்

அத்துமீற நினைக்காதே
குத்தி விடுவேன் எவர் கண்டார்

துடிக்கின்ற காதல் தும்மலை போன்றது
எப்பவும் வரலாம் எவர் கண்டார்
இதயத்தின் ஜன்னல் சாத்தியே கிடக்கும்
எப்பவும் திறக்கும் எவர் கண்டார்

மனமே திகைக்காதே

என் தூக்கத்தை நீ திருடலாம்
எவர் கண்டார் அதை எவர் கண்டார்

நீ கண்களை கைது செய்யலாம்
எவர் கண்டார் அதை எவர் கண்டார்

மோகம் வந்தால் உன் நெஞ்சில்
முட்டி விடுவேன் எவர் கண்டார்

உன்னை விட நான் காதல் செய்து
உன்னை வெல்வேன் எவர் கண்டார்

மனமே திகைக்காதே

துடிக்கின்ற காதல் தும்மலை போன்றது
எப்பவும் வரலாம் எவர் கண்டார்

இதயத்தின் ஜன்னல் சாத்தியே கிடக்கும்
எப்பவும் திறக்கும் எவர் கண்டார்

மனமே திகைக்காதே

உனை பார்த்த நிமிஷத்தில் இருவிழி நிலைத்ததை
இமைகளை தொலைத்ததை எவர் கண்டார்

உனை பார்த்த நிமிஷத்தில் உடல் மெல்ல குளிர்ந்ததை
உயிர் கொஞ்சம் உறைந்ததை எவர் கண்டார்
மனமே திகைக்காதே


படம் : நேருக்கு நேர் (1997) 
இசை : தேவா 
பாடியவர்கள் : மனோ, அனுபமா, பவதாரணி
வரிகள் : வைரமுத்து

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam