Tuesday, February 19, 2013

அழகிய மிதிலை நகரினிலே

அழகிய மிதிலை நகரினிலே - thiraipaadal.com

அழகிய மிதிலை நகரினிலே
யாருக்கு ஜானகி காத்திருந்தாள்
பழகிடும் ராமன் வரவை எண்ணி
பாதையைஅவள் பார்த்திருந்தாள்

காவியக் கண்ணகி இதயத்திலே
கனிந்தவர் யார் இளம் பருவத்திலே
கோவலன் என்பதை ஊர் அறியும்
சிறு குழந்தைகளும் அவன் பேர் அறியும்

பருவத்துப் பெண்கள் தனித்திருந்தால்
பார்ப்பவர் மனதில் என்ன வரும்
இளையவர் என்றால் ஆசை வரும்
முதியவர் என்றால் பாசம் வரும்

ஒருவரை ஒருவர் உணர்ந்து கொண்டால்
உள்ளத்தை நன்றாய் புரிந்து கொண்டால்
இருவர் என்பது மாறி விடும்
இரண்டும் ஒன்றாய் கலந்து விடும்


படம்: அன்னை
இசை: ஆர்.சுதர்சனம்
பாடல்: கண்ணதாசன்
பாடியவர்கள்: PB ஶ்ரீனிவாஸ், P. சுசீலா

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam