நதியோரம் நாணல் ஒன்று நாணம் கொண்டு
நாட்டியம் ஆடுது மெல்ல
நான் அந்த ஆனந்தம் என் சொல்ல
நதியோரம் நீயும் ஒரு நாணல் என்று
நூலிடை என்னிடம் மெல்ல
நான் அந்த ஆனந்தம் என் சொல்ல
வெண்ணிற மேகம்
வான் தொட்டிலை விட்டு
ஓடுவதென்ன மலையில் மூடுவதென்ன
முகில் தானோ துகில் தானோ
சந்தனக் காடு இருக்கு
தேன் சிந்துற கூடிருக்கு
தேன் வேண்டுமா நான் வேண்டுமா
நீயெனை கைகளில் அள்ள
நான் அந்த ஆனந்தம் என் சொல்ல
தேயிலைத் தோட்டம்
நீ தேவதையாட்டம்
துள்ளுவதென்ன நெஞ்சை அள்ளுவதென்ன
பனி தூங்கும் பசும்புல்லே
மின்னுது உன்னாட்டம்
நல்ல முத்திரைப் பொன்னாட்டம்
கார்காலத்தில் ஊர்கோலத்தில்
காதலன் காதலி செல்ல
நான் அந்த ஆனந்தம் என் சொல்ல
படம்: அன்னை ஓர் ஆலயம் (1979)
இசை: இளையராஜா
பாடல்: வாலி
பாடியவர்கள்: P. சுசீலா, S.P. பாலசுப்ரமணியம்
0 Comments:
Post a Comment