Tuesday, February 12, 2013

நதியோரம் நாணல் ஒன்று





நதியோரம் நாணல் ஒன்று நாணம் கொண்டு
நாட்டியம் ஆடுது மெல்ல
நான் அந்த ஆனந்தம் என் சொல்ல

நதியோரம் நீயும் ஒரு நாணல் என்று
நூலிடை என்னிடம் மெல்ல
நான் அந்த ஆனந்தம் என் சொல்ல

வெண்ணிற மேகம்
வான் தொட்டிலை விட்டு
ஓடுவதென்ன மலையில்  மூடுவதென்ன
முகில் தானோ துகில் தானோ
சந்தனக் காடு இருக்கு
தேன் சிந்துற கூடிருக்கு
தேன் வேண்டுமா நான் வேண்டுமா
நீயெனை கைகளில் அள்ள
நான் அந்த ஆனந்தம் என் சொல்ல

தேயிலைத் தோட்டம்
நீ தேவதையாட்டம்
துள்ளுவதென்ன நெஞ்சை அள்ளுவதென்ன
பனி தூங்கும் பசும்புல்லே
மின்னுது உன்னாட்டம்
நல்ல முத்திரைப் பொன்னாட்டம்
கார்காலத்தில் ஊர்கோலத்தில்
காதலன் காதலி செல்ல
நான் அந்த ஆனந்தம் என் சொல்ல







படம்: அன்னை ஓர் ஆலயம் (1979)
இசை: இளையராஜா
பாடல்: வாலி
பாடியவர்கள்: P. சுசீலா, S.P. பாலசுப்ரமணியம்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam