ஒரு துளி விஷமாய் காதல் உயிரில் கலக்குதே
அரை நொடி பொழுதில் உயிரும் இறந்தே பிறக்குதே
பிறக்குதே மயக்குதே
வெல்லுதே வெல்லுதே முரண்களை வெல்லுதே
கொல்லுதே கொல்லுதே தவணையில் கொல்லுதே
உன்னை மறக்க துணிந்து பார்த்தேன்
அட எந்தன் நெஞ்சம் அட் மறுக்குதே
வரைய வரைய அழித்துப் பார்த்தேன்
அதில் மீண்டும் உன்னை மனம் வரையுதே
மெளனத்தாலே பாசத்தாலே ஆசையாலே அவஸ்தையாலே
காதல் தேடி உயிர் உதறுதே
மரணம் தேடும் போதும்
மயக்கம் கொண்டு ஜீவன்
வாழ்வதேன் வாழ்வதேன்
உறவுக்காக ஏங்கி மனுஷப்பூவும்
ஒன்று சாவதேன் சாவதேன்
தடை விதிக்காதே மனம் மண்டியிடும்போதம்
உயிர் துன்பப்படும்போதும்
உன்னை மறக்காதே
மறுமுறை இனி பிறப்பதா
உன் அருகில் தனித்திருப்பதா
காதலே இங்கு மறுப்பதா
இல்லை வெறுப்பதா
ஒரு விடைகொடு விடைகொடு இதயத்தில்
இதயத்தில் இடம் கொடு
துடிக்கிறேன் தவிக்கிறேன்
துடிக்கிறேன் தவிக்கிறேன் தவிக்கிறேன்
காதல் என்னும் தீயில் கருகக்கூட
பெண்மை துணிந்ததே துணிந்ததே
அமில நதியைக் கூட அமுதம் என்று எண்ணி
நீந்துதே நீந்துதே
வலி தெரியாதே விழி பத்திக்கிற போது
உடல் தித்திக்கிற போது விலை கிடையாதே
உடைகிறேன் நான் உடைகிறேன் அட
உன் வசம் சரணடைகிறேன்
கரைகிறேன் மெல்ல உறைகிறேன்
உன்னில் நிறைகிறேன்
இனி முடிவெடு முடிவெடு இதயத்தில்
இதயத்தில் இடம் கொடு
துடிக்கிறேன் தவிக்கிறேன்
துடிக்கிறேன் தவிக்கிறேன் தவிக்கிறேன்
படம்: ஆதிபகவன்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடல்: சிநேகன்
பாடியவர்கள்: ஷாரிப் சப்ரி, ஷ்ரேயா கோஷல்
0 Comments:
Post a Comment