Friday, February 15, 2013

அந்தியிலே வானம்



அந்தியிலே வானம் தந்தனத்தோம் போடும்
அலையோட சிந்து படிக்கும்
சந்திரரே வாரும் சுந்தரியைப் பாரும்
சதிராட்டம் சொல்லி கொடுக்கும்
கூடும் காவிரி இவ தான் என் காதலி
குளிர் காயத் தேடித் தேடி கொஞ்சத் துடிக்கும்

கட்டுமரத் தோணி போல
கட்டழகன் உங்க மேல
சாஞ்சா சந்தோஷம் உண்டல்லோ
பட்டுடுத்த தேவையில்ல
முத்துமணி ஆசையில்ல
பாசம் நெஞ்சோடு உண்டல்லோ
பாலூட்டும் சங்கு அது தேனூட்டும் இங்கு
பாலாறும் தேனாறும் தாலாட்டும் பொழுது
பாய் மேல நீ போடு தூங்காத விருந்து
நாளும் உண்டல்லோ அத நானும் கண்டல்லோ
இது நானும் நீயும் பாடும் பாட்டல்லோ

வெள்ளி அலை தாளம் தட்ட
சொல்லி ஒரு மேளம் கொட்ட
வேளை வந்தாச்சு கண்ணம்மா
மல்லியப்பூ மாலை கட்ட
மாரியிட வேலை கிட்ட
மஞ்சம் போட்டாச்சு பொன்னம்மா
கடலோரம் காத்து ஒரு கவி பாடும் பாத்து
தாளாம நூலானேன் ஆளான நான் தான்
தோளோடு நான் சேர ஊறாதோ தேன் தான்
தேகம் ரெண்டல்லோ இரு ஜீவன் ஒன்றல்லோ
இரு தேகம் ஒன்று ஜீவன் ஒன்று கூடும் இன்றல்லோ


படம்: சின்னவர்
இசை: இளையராஜா
பாடல்: கங்கை அமரன்
பாடியவர்கள்: மனோ, சுவர்ணலதா

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam